பாருப்பா..! – சினிமாவுல நடிச்சதும்.. எப்படி பளபளன்னு.. ஹீரோயினி மாதிரி ஆகிட்டாங்க.. “கோலி சோடா” சீதா..!!

கோலிசோடா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சீதா வின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த கதாபாத்திரத்திற்கு சீதாவை தேர்வு செய்தது குறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நான் நிறைய பேரை ஆடிசன் செய்தேன்.

ஆனால் யாரும் செட்டாவதாக எனக்கு தோன்றவில்லை. ஒரு நாள் காலையில் நான் பைக்கில் சென்றுகொண்டு இருக்கும்போது இந்த பொண்ணு நடந்து வந்துகொண்டிருந்தது. பார்த்ததும் எனக்கு டக்கென தோனுச்சு.. இந்த பொண்ணு படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என்று.

உடனே அந்த பெண்ணை ஃபாலோ பண்ணி கொண்டே சென்றேன். பின்தொடர்ந்து சென்று வண்டியை நிறுத்தி வணக்கம் என் பேரு விஜய்மில்டன் உன் பேரு என்னமா..? என்று கேட்டேன். உடனே என்னை பார்த்து முறைத்து.. தூ என துப்பிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்துவிட்டது அந்த பொண்ணு.

நான் அப்போதும் அந்த பெண்ணை விட வில்லை. அந்த பெண் பின்னாடியே ஒரு கிலோமீட்டர் பைக்கை தள்ளிக் கொண்டே போனேன். அந்த பொண்ணு ஒரு வீட்டுக்குள் சென்றது. அந்த வீட்டு வாசலில் அன்பரசன் பிஏ பிஎல் என போட்டிருந்தது. அட்ரஸை மட்டும் நோட் பண்ணிக் கொண்டு அடுத்த நாளின் வக்கீல் ஃபிரெண்டை கூப்பிட்டு அந்த வீட்டு கதவை தட்டினேன்.

ஒருத்தர் வந்தார் அவர்களிடம் நடந்ததை எல்லாம் சொன்னேன். விழுந்து விழுந்து சிரித்த அவர்.. என் வீட்டில் எந்த பொண்ணும் இல்லை. என் வீட்டுக்கு பின்னாடி இருக்கிற ஒரு வீட்ல ஒரு பொண்ணு இருக்கு அந்த பொன்னான பாருங்க என்று கூறினார்.

ஆனால், அந்த பொண்ணு இல்லை வேறு பொண்ணு தான் இருந்தது. பிறகு, காலையில் ஒரு பெண் வந்து சென்றாள்.. ஒருவேளை அவளாக இருக்க வாய்ப்புண்டு என்று ஒரு விலாசத்தை கொடுத்தார். அந்த விலாசத்திற்கு என்னுடைய உதவியை அனுப்பி விசாரித்த போது அங்கே சீதா இருந்தார்.

அவரிடம் என்னுடைய உதவி இயக்குனர் கேட்டிருக்கிறார். உடனே அவருடைய அம்மாவும் அப்பாவும் விஜய் மில்டன் சார்-ஐ எங்களுக்கு மிகவும் நன்றாக தெரியுமே என்று கூறியுள்ளார்.

உங்களுக்கு விஜய்மில்டன் சாரை தெரியுமா..? எப்படி..? என்று கேட்டிருக்கிறார் என்னுடைய உதவி இயக்குனர். அதற்கு அவர்கள் நாங்கள் லிங்குசாமி வீட்டில் தான் பாத்திரம் கழுவும் வேலை செய்கிறோம். அப்போது விஜய் மில்டன் சார் அங்கே நிறைய முறை வந்திருக்கிறார். அதன் மூலமே அவரை தெரியும் என்று கூறியிருக்கின்றனர்.

அதன்பிறகு சீதாவை நடிக்க வைத்திருக்கின்றனர். இப்படி திரையுலகிற்கு அறிமுகமான நடிகை சீதாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது, ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் நடிகை சீதா. இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவில் வெற்றி பெற அழகு முக்கியம் கிடையாது திறமையும் வாய்ப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் ஜொலிக்கலாம் என்று அவருக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …