மீண்டும் எட்டுத்திக்கும் தன் பெயரை சொல்ல ஹீரோவாக வர இருக்கிறார் கவுண்டமணி …பராக்…. பராக்…!!

 தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காமெடியன்களின் வரிசையில் களை கட்டி தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்து இன்று வரை பெயர் சொல்லும்படி இருப்பவர்தான் நடிகர் கவுண்டமணி.

இவர் தொடர்ச்சியாக பல படங்களில் காமெடியனாக தன்னுடைய கேரக்டரை பக்காவாக செய்து வந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் சினிமாவை விட்டு அப்படியே விலகி விட்டார்.

இவர் நடிகர் செந்தில் உடன் இணைந்து அடித்த காமெடிக்கு அளவே இல்லை என்று கூறலாம். இதன் மூலம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்ற காமெடியன் வரிசையில் இவரும் ஒருவர்.

 மேலும் இவர் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். பிறகு சில படங்களில்  குணச்சித்திர வேடத்திலும் வந்து கலக்கி இருப்பார்.

 கடந்த ஆறு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காத இவர் தற்போது பழனிசாமி வாத்தியார் என்ற படத்தில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை  பேயை காணோம் என்ற படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்க உள்ளார்.

மேலும் வருகின்ற புது வருடமான ஜனவரி மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் இந்தப் படத்திற்கான கெஸ்ட் ரோலில் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை நடிக்க வைப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அந்த வகையில்  மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரி என்ட்ரி கொடுத்திருக்கும் கவுண்டமணிக்கு இந்த படம் பெயர் சொல்லும் விதத்தில் அமையும் படி இருக்கும் என நினைக்கலாம். இதனை அடுத்து கவுண்டமணியின் ரசிகர்கள் அனைவரும் தற்போது உத்வேகம் பெற்று இவரின் படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

கதாநாயகனாக இவர் மீண்டும் களம் காண இருப்பதை அறிந்தது திடைலகினர் இவருக்கு ஏகப்பட்ட கமாண்டுகளை தந்திருப்பதோடு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …