வருங்கால கணவருடன் நெருங்கி இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸை வெளியிட்டு வாஃவ்… ஒன்டர்புல் சொல்ல வைத்த ஹன்சிகா…!

 குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை ஹன்சிகா தமிழில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் என்ற திரைப்படத்தில்  நடித்திருந்தார்.

 அதன் பிறகு இவர் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, பிரியாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் குடியேறியவர்.

 சிவகார்த்திகேயனோடு இணைந்து டார்லிங் டம்பக்கு பாடலில் இவர் கலக்கி இருந்த விதம் பட்டி தொட்டி எங்கும் இன்னும் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். அந்த அளவுக்கு அந்த பாடலில் தனது நடனத்தின் மூலம் பட்டையை கிளப்பியவர்.

 தற்போது ஆறு படங்களில் படு பிஸியாக நடித்து வரும் ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அவர் தனது பிசினஸ் பார்ட்னரான சோக்கேல் கதுரியாவை தான் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிகிறது.

வரும் டிசம்பர் நான்காம் தேதி நடைபெற இருக்கக்கூடிய இந்த திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்களை இவர் வெளியிடுவார் என திரையுலக வட்டாரங்கள் கூறி வருகிறது. இதை அடுத்து ரசிகர்கள் மற்றும் திரை உலகை சேர்ந்தவர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் தற்போது அவர் தனது கணவராக வரக்கூடியவரோடு நெருக்கமாக இருக்கக்கூடிய புகைப்படங்களை வலைதளத்தில் வெளியிட்டு ஒரு சர்ப்ரைஸை  ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.

 இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருவதோடு ஹன்சிகாவை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவு இது உள்ளது. சில ரசிகர்கள் இந்த பச்சைக்கிளி தன் கையை விட்டு போய்விட்டதே என்று ஏக்கத்தில் இருப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.

பார்க்க கண் படும்போல் இருக்கக் கூடிய இந்த புகைப்படத்துக்கு உடனடியாக சில ரசிகர்கள் சுத்தி போட்டு வருவதுடன் ஹன்சிகாவையும் சுத்தி போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …