ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகை ஹரிகா தமிழ் மற்றும் தெலுங்கில் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். தமிழில் திருமகள் என்ற தொலைக்காட்சித் தொடரில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
தெலுங்கில் கல்யாணி என்ற சீரியலில் கல்யாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அஞ்சலி சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் திருமகள் தொடரில் நடித்து வரும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
பொறியியல் படிப்பை படித்து உள்ள இவர் மாடலிங் துறையில் நுழைந்தார் அதன்பிறகு சில விளம்பரப் படங்களிலும் நடித்தார் இதன் பயனாக ஒரு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
இதனை தற்போது பயன்படுத்தி வரும் இவர் தொடர்ந்து சினிமாவில் நுழையும் எண்ணத்திலும் இருக்கின்றார் போல தெரிகின்றது.
சமீப காலமாக, சீரியலில் இருந்து சினிமாவிற்கு வந்து ஜொலிக்கும் நடிகைகளின் பட்டியல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் நடிகை சரிகாவும் அந்த பட்டியலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது உள்ள புகைப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை எழுதுகின்றனர்.