விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ள கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பல நடிகர் நடிகைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரிப்பிரியா.
தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் கதை என்ற தொடரில் நடித்த ஹரிப்பிரியா, சன்டிவியின் வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் விக்னேஷ் குமாருடன் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு சாய் ப்ரித்திவி என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிப்பிரியா – விக்னேஷ் குமார் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். திருமண வாழக்கை இப்படி பாதியில் முடிந்தாலும், ஹரிப்பிரியாவின் சின்னத்திரை வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.
இதுவரை 12-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு சன்டிவியின் ப்ரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு லட்சுமி வந்தாச்சு, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
சீரியலில் இவரை புடவை சகிதமாகவே பார்த்து பழகி போன ரசிகர்கள் திடீரென மாடர்ன் உடையில் பார்த்ததும் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் ஹரிப்ரியா-வா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.