நான் நினைத்ததை விட பலமடங்கு பணம் கொடுத்தார் ! AK 62 இயக்குனர் நெகிழ்ச்சி..!

தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் இரண்டு இயக்குனர்கள் லியோ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் மற்றும் AK 62 படத்தை இயக்கும் மகிழ்திருமேனி. பொதுவாக டாப் நடிகர்களை இயக்கும் மற்றும் இயக்கவிருக்கும் இயக்குனர்களை பற்றியே ரசிகர்கள் அதிகமாக பேசுவார்கள்.

ஒரு பக்கம் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி அடையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அஜீத் குமாரை வைத்து இயக்குனர் மகிழ் திருமேனி AK 62 படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் மற்ற அப்டேட் இன்னும் வரவில்லை.

தற்பொழுது அஜித் ரசிகர்கள் மகிழ்திருமேனி பற்றி இணையதளத்தில் தகவல்களை சேகரித்த வண்ணம் உள்ளனர். ஏனென்றால் நீண்ட வருடங்களுக்கு பிறகு மகிழ்திருமேனி ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்க உள்ளார். இதனாலேயே இந்த படம் எப்படி வரும் எனவும் கதைக்களம் எப்படி அமையும் எனவும் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.

மகிழ்திருமேனி ஆரம்ப காலகட்டத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் சென்று நான் உங்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றலாமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு கௌதம் வாசுதேவ் மேனனும் ஒரு நொடி கூட சிந்திக்காமல் சரி என்று கூறியிருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனனின் மின்னலே திரைப்படத்தை பார்த்துவிட்டு மகிழ்திருமேனி அசந்து போனதாகவும் பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதனாலேயே அவர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில்தான் ஒருமுறை மகிழ்திருமேனி அவர் நண்பர்களுடன் வெளியே செல்வதற்காக கொஞ்சம் பணம் வேண்டும் என கௌதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரோ நினைத்ததை விட பல மடங்கு அதிகமான பணத்தை கொடுத்திருக்கிறார்.

இதனால் இன்றளவும் மகிழ்திருமேனி இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது என கூறியுள்ளார். அதற்கு முன்பு செல்வராகவனிடம் உதவி இயக்குனராக இவர் பணிபுரிந்துள்ளார்.

பின்பு இயக்குனராக யாவரும் கேளிர்யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தடையற தாக்க படத்தின் மூலம் பிரபலமான இயக்குனராக மாறியுள்ளார் இதனால் தான் அஜித் ரசிகர்கள் இவர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளார்கள்

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …