தமிழ் திரையுலகுக்கு மட்டுமல்லாமல் பாலிவுட் கோலிவுட் என்று அனைத்து திரைகளிலும் சக்கைபோடு போட்டு நடித்து வந்த நடிகர் தனுஷ் வெற்றிகளை பலவாறு சூடி வந்தார்.
இவர் வளர்த்துவிட்ட அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இவரது வியாபாரத்திற்கு கடும் போட்டியாக வந்து நெருக்கடிகளை கொடுத்த வண்ணம் இருக்கிறார்கள் இதன் ஆகியவற்றை கீழே இறங்கி விட்டது என்று தான் கூற முடியும்.
இவரின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த படங்கள் நல்ல நிலையில் லாபத்தை ஈட்டித் தந்த போதிலும் தற்போது இந்த கம்பெனிகள் தயாரித்து வெளியிட்ட படங்கள் அனைத்தும் வசூலில் கோட்டை விட்டதன் காரணமாக அந்த கம்பெனியை அவர் இழுத்து மூடி விட்டார்.
சிவகார்த்திகேயன் காட்டில் நல்ல மழை பெய்கிறது இவர் தற்போது நடித்து வரும் அனைத்து படங்களும் 100 கோடிக்கு மேல் வசூலை குவிக்கும் என்றபடி உள்ளது. இதற்கு உதாரணமாக டாக்டர், டான், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
எனவே வரவிருக்கும் அயலான், மாவீரன், பிரின்ஸ் போன்ற சிவகார்த்திகேயனின் படங்கள் மேலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பதால் தனுஷ் மார்க்கெட்டை துவம்சம் செய்து விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆரம்ப காலத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்துக்கு ஆதரவாக அவர்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட தனுஷின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று பாலிவுட்டை சேர்ந்த வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இந்த நெருக்கடியான கட்டத்தில் இருந்து தனுஷ் எப்படி மீண்டு வருவார் தன் மனைவியை பிரிந்த பின் அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளும் தோல்வியில் பக்கம் தான் செல்கிறது இதற்கு காரணம் என்ன என்று உணர்ந்து தனுஷ் செயல்படுவார். இதிலிருந்து மீண்டு வந்து கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
எனவே கவலையில் இருக்கும் தனுஷின் ரசிகர்களும் அவர் மீண்டும் ஒரு தருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.