“இதையெல்லாம் செய்யுங்க உங்க வீட்டுக்கு..!” – மகாலட்சுமி ஓடோடி வருவாள்..!!

 திருமால் மனைவியான மகாலட்சுமி செல்வத்திற்கு தலைவியாக விளங்குகிறாள். இவள் பார்வை படும் இடமெல்லாம் செல்வ செழிப்பாகும். ஐஸ்வரியங்கள் எட்டு திக்கும் இருந்தும் வந்து குவியும்.

 அப்படிப்பட்ட மகாலட்சுமியை உங்கள் வீட்டுக்கு ஓடோடி வர வைக்க சில வாஸ்து முறைகள் இருக்கிறது. அந்த முறைகளை நீங்கள் கட்டாயம் கடைப்பிடித்தால் மகாலட்சுமி கட்டாயம் உங்கள் வீட்டில்  கட்டாயம் எழுந்தருளுவாள்.

 மகாலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கும் வாஸ்து முறைகள்

 உங்கள் வீடு எப்போதும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். தூய்மை இல்லாத இடத்தில் மகாலட்சுமி வரமாட்டார். எனவே நீங்கள் செல்வங்கள் வேண்டும் என நினைத்தால் கண்டிப்பாக அனைத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் வடக்கு திசை மகாலட்சுமிக்கு உரிய திசை என்பதால் அந்த திசையில் குப்பை சம்பந்தமான பொருட்களை வைக்க வேண்டாம். மேலும் அந்தப் பகுதிகள் காலியாக இருந்தால் உங்களுக்கு பண பிரச்சனை இடையில் ஏற்படாது.

 அதுபோலவே பெண்கள் சமையல் அறையில் விழும் பாத்திரங்களை உடனுக்குடன் தேய்த்து கழுவி வைத்து விட வேண்டும். அப்படியே ஒன்றாக போட்டு அசுத்தமாக வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் கட்டாயம் லட்சுமி வாசம் செய்வது தடைப்படும்.

 மாலை நேரத்தில் கட்டாயம் விளக்கு ஏற்றி சுவாமியை துதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது உங்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்கள் நிச்சயமாக கிடைக்கும். அதுபோல உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அவசியம் துளசிக்கும் விளக்கை ஏற்றி வழிபடுங்கள். ஏனென்றால் துளசியில் வாசம் செய்வது தான் மகாலட்சுமி.

 வீட்டில் நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள்.இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் போது அதிகளவு நன்மைகள் உங்கள் வீட்டுக்கு கிடைப்பதோடு உங்களது ஆரோக்கியமும் வளர்ச்சியும் பன்மடங்கு அதிகரிக்கும். இதை மனதில் கொண்டு நீங்கள் செயல்பட்டால் கட்டாயம் லட்சுமி உங்கள் வீட்டில் வாசம் செய்வாள் செல்வ செழிப்பு மேலோங்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …