இன்று பெரும்பாலும் நகரத்தில் இருப்பவர்கள் அனைவருமே வீட்டில் ஒரு சிறிய தோட்டத்தையோ, மாடியில் ஒரு சிறிய தோட்டத்தை அமைத்து அவர்களுக்கு தேவையான காய்கறிகளை அதிலிருந்து பெறுவதற்கு பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் வீட்டு தோட்டத்திலிருந்து தக்காளியை அதிக அளவு பெறுவதற்கு என்னென்ன வழிகள் உள்ளது.
அதை எப்படி எல்லாம் நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு அதிக அளவு தக்காளி கிடைக்கும் என்பதை பார்க்கலாம். பொதுவாகவே வீட்டு தோட்டத்தில் தக்காளி செடியை வளர்ப்பது என்பது மிகவும் எளிமையான விஷயம்தான்.
இதற்கு ஓரளவு சூரிய ஒளி இருதக்காளிந்தாலே இந்த தக்காளி வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும். தக்காளி செடி வளர தேவையான போதுமான அளவு ஊட்டச்சத்தை நீங்கள் அளித்தல் அவசியம்.
இப்போது தான் நல்ல சத்தான தக்காளி பழங்கள் நமக்கு கிடைக்கு.ம் தக்காளியில் தேவையில்லாத கிளைகள் அதிகரிக்கும் போது பூ இல்லாத பகுதிகளை அப்படியே வெட்டி விடுவதின் மூலம் உங்களுக்கு ஆரோக்கியமான தக்காளி செடி கிடைப்பதோடு மட்டுமல்லாமல் பழங்களும் அதிக அளவு கிடைக்கும்.
மேலும் எந்த செடிகள் பூச்சிகளால் தாக்குதலுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை வாரம் ஒரு முறை நீங்கள் கவனித்து வருதல் வேண்டும். போதுமான அளவு நீர்ச்சத்து கொடுக்க வேண்டும்.
நீங்கள் இதைப் பின்பற்றினால் அந்த தக்காளி செடி நன்கு வளர்ந்து உயர வந்து பூவிடும் சமயத்தில் அதற்கு முட்டுக் கொடுப்பதின் மூலம் செடிகள் சாயவோ அல்லது உடையவோ நேரிடலாம்.
மேலும் இந்த தக்காளிக்காய் 5 லிருந்து பத்து நாட்களுக்குள் முதிர்ச்சி அடையும். அதிகளவு ஈரப்பதம் இல்லாத மண்ணே இதற்கு உகந்தது.
நீங்கள் உங்கள் வீட்டில் காய்கறி கழிவுகளை தூர எரியாமல் தக்காளி செடிகளுக்கு அடியில் போட்டு விடுங்கள். நல்ல அடி உரமாக அது செடிக்கு கிடைக்கும் போது இயற்கையாக ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு நஞ்சுகளாக காய்களை நமக்கு கொடுக்கும்.