நானாக சீரியலில் இருந்து விலகவில்லை.. ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா உருக்கம்..!

பிரபல சீரியல் நடிகையான பிரியங்கா நல்காரி மாடல் அழகியாக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு சீரியல்களில் தலை காட்ட ஆரம்பித்தார்.

இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சீரியல் நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

நடிகை பிரியங்கா:

இவர் சன் தொலைக்காட்சியில் ரோஜா தொடரில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகினார் .

அந்த தொடரில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஐதராபாத் சேர்ந்தவரான பிரியங்கா நல்காரி ராகுல் வர்மா என்ற தொழிலதிபரை நீண்ட காலமாக காதலித்து வந்தார்.

இதனிடையே திடீரென மிகவும் எளிமையான முறையில் மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோவிலில் இவர்களது திருமணம் நடைபெற்றது .

பெற்றோர்கள் இல்லாமல் இவர்களது திருமணம் நடைபெற்றதால் பலர் விமர்சித்தனர். பிரியங்கா பெற்றோர்களை எதிர்த்து இது திருமணத்தை செய்து கொண்டதாக பலர் பேசினர்.

சீரியல் நடிகை:

பின்னர் பெற்றோர்களின் சம்மதத்தை வாங்கி தான் திருமணம் செய்ததாகவும் ராகுலின் பெற்றோர் தான் இந்த திருமணத்திற்கு மகிழ்ச்சி அடையவில்லை எனவும் அவர் தெளிவான விளக்கத்தை கூறினார் .

திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக சீரியல்களில் நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி இந்த நிலையில் தான் தற்போது நளத் தமயந்தி தொடரிலிருந்து சீரியல் நடிகை பிரியங்கா நள்காரி விலகியதன் காரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நான் நல தமயந்தி தொடரிலிருந்து தானாக விலகவில்லை என தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் பிரியங்கா.

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை கற்பனை செய்து கொள்ள வேண்டாம்…. வீணாக வதந்திகளை பரப்பாதீர்கள்.

நானாக விலகவில்லை..

சீரியலில் இருந்து நானாக விலகவில்லை அடுத்த கட்ட படப்பிடிப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

ஆனால், திடீரென இது நடந்ததற்கு காரணம் விரைவில் தெரியப்படுத்துவேன் என கூறியிருக்கிறார்.

 

பிரியங்காவின் இந்த பதிவின் மூலம் அவர் தொடரில் இருந்து தாமாக விலகவில்லை என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

தயாரிப்பு நிறுவனம் அல்லது இயக்குனரிடம் இது தொடர்பாக விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

நதமயந்தி தொடரில் பிரியங்கா நல்காரி விலகிய பிறகு அவரின் கதாபாத்திரம் விபத்தில் இறந்து போனதாகவும் அவருக்கு பதிலாக அவரின் தங்கை என புதிய கதாபாத்திரம் ஒன்றில் அறிமுகமாக உள்ளதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பிரியங்காவின் தங்கை கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீநிதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …