குந்தவை கதாபாத்திரத்தை விட இந்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்பினேன்..! – கூச்சமே இல்லாமல் கூறிய திரிஷா..!

நடிகை திரிஷா : தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது அனைத்து மொழி படங்களிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வந்த நடிகை திரிஷா தற்சமயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

தற்சமயம் பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்த நடிகை திரிஷா இந்த கதாபாத்திரம் குறித்து சில தகவல்களை மக்களிடம் தெரிவித்துள்ளார்.

திரிஷா

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் ஒரு நீங்காத பேர் சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு அனைத்து மக்களாலும் வெகுவாக பாராட்டை பெற்றது. இவர் நடித்த அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

மேலும் நடிகர் விஜயுடன் நிறைய படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். குறிப்பாக இவர் நடித்த கில்லி திருப்பாச்சி குருவி போன்ற படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வெகுவாக கவரப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இதில் கில்லி திரைப்படத்தில் செல்வி எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

திரிஷா

இதனை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் த்ரிஷாவிற்கு வந்த வண்ணம் இருந்தன. மேலும் நடிகை திரிஷா 96 எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்திருந்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு போன்ற அனைத்து மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்த திரைப்படம் இதனை அடுத்து நடிகை திரிஷா தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் மிகவும் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ஆகும். இதில் குந்தவை கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

திரிஷா

இந்த நிலையில் நடிகை திரிஷா இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களிடையே நிறைய இந்த படத்தின் நிகழ்வுகளை குறித்து பேசி இருந்தார் அதில் அவர் கூறியதாவது, இந்த படத்தில் நான் முதல் முதலாக நந்தினி கதாபாத்திரத்திலேயே நடிக்க விரும்பினேன்.

பிறகு குந்தவை கதாபாத்திரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்று எனக்கு இயக்குனர் மணிரத்தினம் சார் விளக்கினார். இந்த கதாபாத்திரத்தில் எப்படி கம்பீரமாக நீ நடக்க வேண்டும் என்று எனக்கு நிறைய அறிவுரை வழங்கினார்.

அதில் அவர் கூறிய ஒரு அறிவுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவரின் வீடியோக்களை எல்லாம் எனக்கு பார்க்கச் சொல்லி என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் எப்படி கம்பீரமான முறையில் நடக்கிறார் கம்பீரமான தோற்றத்துடன் பார்க்கிறார் என்று எனக்கு சில வீடியோக்களை பகிர்ந்து அதன்படி இந்த படத்திலும் நீ இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறினார் இயக்குனர் மணிரத்தினம்.

அதன்படியே நான் இந்த படத்தில் நடிகை ஜெயலலிதா அவர்களின் உடல் பாவனையை மேற்கொண்டு இந்த படத்தில் நடித்து முடித்தேன் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் நிகழ்வுகளைப் பற்றி வெளிப்படையாக கூறினார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …