ரசிகர்களை ஏமாற்றுகிறதா சன் டிவி? ஆல்யா மானசா நடிக்கும் இனியா புதிய ப்ரொமோவை வெளியிட்ட சன் டிவியால் பரபரப்பு…!!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையை பெற்றுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த வரிசையில் கயல் சீரியல் படு ஜோராக டிஆர்பி ரேட்டை எதிர வைக்க மிகவும் உதவிகரமாக உள்ளது. மேலும் சன் டிவியில் நம்பர் ஒன் சீரியலாக இரு திகழ்ந்து வருகிறது.

 இதை அடுத்து இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலும் இந்த வாரத்தோடு முடிவடைகிறது.நீண்ட வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றிருக்கக் கூடிய இந்த தொடரானது இறுதி கட்டத்தை அடைந்திருப்பதால் ரசிகர்கள் அனைவரும் சற்று சோகத்தோடு காணப்படுகிறார்கள்.

 எனினும் சில பேர் இந்த தொடர் முடிவடைவது நல்லது தான் என்று கூறி வருகிறார்கள். இதை அடுத்து இந்த வாரத்தோடு ரோஜா முடிந்த பின்னால் இந்த நேரத்தில் எந்த தொடர் ஒளிபரப்பாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

 அதனை பூர்த்தி செய்யும் விதமாக ஆலியா மானசா நடித்த இனியா சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் டிசம்பர் மூன்றாம் தேதியோடு ரோஜா சீரியல் முடிவு வருகிறது.

இதன் பிறகு டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து இரவு 9 மணிக்கு ஆலியா மானசாவின் இனியா தொடர் வரும் என்று சில தினங்களுக்கு முன்பு சன் டிவி ப்ரோமோவை வெளியிட்டது.

மேலும் விஜய் டிவியின் ராஜா ராணி புகழ் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி இதில் நடித்திருக்கிறார். ஆனால் திடீரென்று அந்தப் பிரமோ யூடியூப் – ல் இருந்து தற்போது நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் பட்டியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 அதுமட்டுமல்லாமல் அவர்கள் தற்போது புதிய பிரமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் இனியா சீரியல் விரைவில் என்று குறிப்பிட்டிருப்பதால்  டிசம்பர் மூன்றாம் தேதிக்குப் பிறகு இந்த சீரியல் ரோஜாவின் நேரத்தில் ஒளிபரப்பப்படுமா என்ற சந்தேகம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

 அதுமட்டுமல்லாமல் இந்த சீரியல் விரைவில் என்று அறிவித்திருப்பதால் 9 மணிக்கு இனியாவை அடுத்து வேறு எந்த சீரியல்களை ஒளிபரப்ப போகிறார்கள் என்ற கேள்வியும் கேட்டிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …