“சதுரங்க வேட்டை”-யில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகையா இது..? – ஷாக் ஆக்கிய இஷாரா நாயர்..!

நடிகை இஷாரா நாயரை அனைவருக்கும் ஞாபகம் இருக்கிறதா என்பது சந்தேகமாக தான் உள்ளது. ஏனெனில் இவர் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தில் முதல் முதலில் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தை இயக்கியவர் வினோத் ஆவார்.

மேலும் இவர் தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். தனது முதல் படமான சதுரங்க வேட்டை படத்தில் நட்டி நாட்ராஜ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இவரை நடிக்க வைத்திருந்தார்.

மேலும் இந்த நடிகை 2014 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் வெளியான வெண்மேகம், பப்பாளி, இவன் யார் என்று தெரிகிறதா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்ட பின்னர் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். முதல் படத்தில் படு அப்பாவியான குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த இவர் நிஜத்தில் படு மாடன் பெண்ணாக சுட்டியான பெண்ணாக வலம் வருகிறார்.

இவர் துபாயை சேர்ந்த சகில் என்பவரை திருமணம் செய்து கொண்ட விஷயம் பலருக்கும் தெரியாது அந்த அளவு மிக எளிமையான முறையில் தனது திருமணத்தை முடித்துக் கொண்ட இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். தற்போது திருமணத்துக்கு பின் துபாயில் செட்டில் ஆகிவிட்ட இவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதுவரை சினிமா பக்கம் இருந்து திருமணத்துக்கு பிறகு ஒதுங்கி இருந்த இவர் தற்போது சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து குழந்தை மற்றும் கணவரோடு இருக்கக்கூடிய சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பரவலாக பதிவேற்றி விட்டார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஆள் அடையாளம் தெரியாத அளவு திருமணத்திற்கு பின் மாறி இருக்கிறாரே என்ற படி ஷாக்காக கேட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கூடிய விரைவில் புதிய படங்களில் நடிப்பீர்களா என்பது போன்ற கேள்விகளையும் எழுப்பி வருகிறார்கள்.

 

மேலும் குடும்பத்தோடு குழந்தையோடு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருவதோடு விரைவில் உங்களை சினிமாவில் பார்ப்பதற்காக காத்திருக்கிறோம் என்று கமெண்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …