என்ன? விரைவில் ஜான்வி கபூரை தெலுங்கு படத்தில் பார்க்கலாமா? பெரிய பட வாய்ப்பில் நடிக்க இருக்கிறாரா? ஜான்வி …!

செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாடலில் ஊஞ்சலில் ஆடிய ஸ்ரீ தேவியை இன்னும் யாரும் மறக்க முடியாது. அந்த அளவுக்கு தமிழ் நெஞ்சங்களில் குடியேறியிருக்கும் இவருக்கும் தயாரிப்பாளரான போனி கபூருக்கும் பிறந்த முதல் பெண் குழந்தை தான் ஜான்வி கபூர்.

 சினிமா பின்னணியை பக்க பலமாக கொண்டிருந்த இவருக்கு பாலிவுட் தடாக்  என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து இவர் பாலிவுட்டில் ரோகி, குட் லக் ஜெர்ரி போன்ற படங்களில் நடித்து பாலிவுட் நடிகைகளின் வரிசையில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.

 இப்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள மிலி என்ற படம் சக்கை போடு போட உள்ளது. இதனை அடுத்து இவர் முத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ள அந்த படத்தின் பிரமோஷனுக்காக  ஹைதராபாத் வந்திருக்கிறார்.

 இதனை அடுத்து செய்தியாளர்கள் சிலர் ஜான்வி கபூரிடம் ஏற்கனவே தேடி வந்த சில தெலுங்கு வாய்ப்புகளை தவிர்த்தது ஏன் என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு அப்போது தான் ஹிந்தியில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் அந்த படங்களை இயக்க முடியவில்லை என்று பதிலளித்தார்.

 அதுமட்டுமில்லாமல் தான் தற்போது தெலுங்கு  படத்தில் பணியாற்ற மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் ஒரு பெரிய வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் கூறி இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர்  கூறும்போது அந்த பட வாய்ப்பானது முன்னணி ஹீரோவின் பட வாய்ப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தனக்கு முக்கியத்துவம் தரக்கூடிய வேடமாக இருக்கக்கூடிய பட்சத்தில் தெலுங்கில் உடனடியாக நடிப்பதற்கு தயாராக இருப்பதாக ஜான்விர்க்கபூர் அறிவித்துள்ளார்.

 இதனை அடுத்து இவரை விரைவில் தெலுங்கில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கும் போது தமிழ் ரசிகர்களும் எப்போது தமிழ் படத்தில் நீங்கள் நடிப்பீர்கள் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள். இதற்கு உரிய பதிலை தக்க சந்தர்ப்பம் வரும்போது இவர் பதில் அளிப்பார் என்று நாம் கூறலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …