என்ன காரணம் தெரியுமா? ஜெயம் ரவியின் அகிலன் படம் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா…?

 மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி மிகச் சிறப்பான முறையில் தனது கேரக்டரை செய்திருப்பார். இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

அந்த வரிசையில் தற்போது கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள படம் தான் அகிலன் இந்தப் படமானது ஆகஸ்ட் மாசத்திலேயே வெளியிட வேண்டிய நிலையில் இதுவரை வெளியிடாமல் இருப்பதின் ரகசியம் என்ன என்று  தெரியாத நிலை இருந்தது.

 இதற்குக் காரணம் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ்க்கு பின் இதை கிறிஸ்மஸ் சமயத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தது தான் மிக முக்கியமான காரணமாக கூறினார்கள்.

 அதனால் வரும் கிறிஸ்துமஸ் அன்று இந்த திரைப்படம் வெளிவருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று ரசிகர்கள் கருதி வந்த நிலையில் தற்போது இந்த படம் மீண்டும் திரையிடப்படாமல் தள்ளி வைக்கப்படுகிறது.

 இதற்கு காரணம் தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளதால் வரும் புத்தாண்டுக்குப் பிறகு பிப்ரவரி மாதம் அகிலன் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று பட குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர் தன்யா ரவி சந்திரன் உட்பட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதனை அடுத்து அகிலன் படத்திற்குப் பிறகு அகமது இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து இறைவன் மற்றும் ராஜேஷ் எம் இயக்கம் சைரன் ஆகிய படங்களில் ஜெயம் ரவி படு பிஸியாக நடித்து வருகிறார்.

எனவே அகிலன் படமானது தற்போது வெளிவராது என்பது உறுதியாக தெரிந்து விட்டது அடுத்து ரசிகர்கள் பிப்ரவரி மாதம் வெளிவரும் இந்த அகிலன் படத்தை காண்பதற்கு தற்போதைய தயார் ஆகி வருகிறார்கள் என்று கூறலாம்.

எனவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விரைவில் இந்த படம் திரைக்கு வந்து வெற்றியை சுட வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …