மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகர்கள் வரிசையில் இருந்தவர்தான் நடிகர் ஜெயராம்.
இவர் குணசத்திர வேதத்திலும் கலக்கக்கூடிய கெப்பாசிட்டி உடையவர். இவர் தற்போது வெளிவந்த பிரம்மாண்டமான படமான பொன்னியின் செல்வன் படத்தில் குறிப்பிட்ட கேரக்டர் ரோலை பக்காவாக செய்து மிக நல்ல பெயரை எடுத்திருந்தார்.
இவரின் குடும்பத்தை பொறுத்தவரை அனைவருமே திரைத் துறையில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மனைவியான சாந்தி 90களில் மிகப் பிரபலமான நடிகைகளின் வரிசையில் இருந்தவர்.
ஏற்கனவே இவரின் மகனான காளிதாஸ் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவது அனைவருக்கும் நன்றாக தெரியும். அது மட்டுமல்லாமல் தனது அப்பாவை போலவே நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் இவருக்கு மார்க்கெட்டில் நல்ல பெயரும் உள்ளது.
மேலும் ஜெயராமிற்கு ஒரு மகளும் இருக்கிறார் .அவர் பெயர் மாளவிகா ஜெயராம் என்பதாகும். இவரும் விரைவில் திரையுலகில் ஹீரோயினியாக வலம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாளவிகா தனது அப்பாவோடு இருக்கும் புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படம் தான் வைரலாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவருமே விரைவில் இவர் களம் கண்டால் திரையுலகில் முன்னணி நடிகைகளின் வரிசையை எட்டிப் பிடிக்கக்கூடிய அத்தனை அம்சங்களும் இவருக்கு உள்ளது என்று கொண்டாடி வருகிறார்கள்.
அந்தளவு அந்தப் புகைப்படத்தில் படு கியூட்டாக இவர் இருக்கிறார் என்பதை பார்த்ததுமே அனைவரும் சொல்லிவிடுவார்கள். அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் எப்போது களம் இறங்குவார் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். விரைவில் அந்த நல்ல செய்தியை ஜெயராம் கூறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் திரையுலகில் இதுபோல வாரிசு நடிகர்கள் நடிகைகள் வருவது புதிதில்லை எனினும் அவர்கள் திறமை இருந்தால் மட்டும்தான் இத்துறையில் நிலைத்து நிற்க முடியும்.
இல்லையென்றால் ஒரு படம் வந்த சுவடு கூட தெரியாமல் அப்படியே போய் விடுவார்கள் என்பது நன்றாக தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மாளவிகா திரையுலகில் சாதிப்பாரா என்பதை காத்திருந்து பார்க்கலாம்.