ஜெனிபர் அமெரிக்கன் இளம் நடிகை ஆவார். இவர் 22 வயதில் காதல் நகைச்சுவை கவர்ந்த சில்வர் லைனிங் பிளே புக் திரைப்படத்தில் நடித்து பல விருதுகளை வாரி குவித்தார்.
குறிப்பாக இந்தப் படத்திற்கு அகாடமி விருது, கோல்டன் கிளாப் விருது, ஸ்கிரீன் ஆட் கில்ட் விருது, சேட்டிலைட் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான இண்டிபெண்டன்ஸ் ஸ்பிரிட் விருது போன்ற விருதுகளை பெற்றிருக்கிறார்.
மேலும் ஹாலிவுட் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் இவர் சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதோடு அசத்தலான கருத்துக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவார்.
ஹாலிவுட் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்துவரும் இவரது திரைப்படங்களை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பார்க்கவே பதுமை போல இருக்கக்கூடிய இவரின் அழகுக்கு அனைவரும் அடிமைகள் என்று தான் கூற வேண்டும்.
அப்படிப்பட்ட இந்த ஹாலிவுட் நடிகையின் சமீபத்திய பதிவானது பாரபரப்பாக தற்போது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. மேலும் இதன் மூலம் பெண்களுக்கு தற்போது ஆண்கள் மத்தியில் எந்த சூழ்நிலை நிலவுகிறது அது எந்த காலத்தில் மாறும் என்பதை கண்டுபிடிக்கவே முடியாது என்பது போன்ற ஒரு கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.
உலகப்புகழ் பெற்ற நடிகையான ஜெனிஃபர் லாரன்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளியிட்டுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை எற்படுத்தியிருக்கிறது.
அது அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலையாள் ஒருவர் இவருடைய கழிவறையை சுத்தம் செய்யும் பொழுது அங்கே இருந்த இவரது உள்ளாடையை எடுத்து முகர்ந்து பார்த்து கொண்டிருக்கிறார்.
அப்போது அவர் அவன் செய்ததை பார்த்து அவனை கையும் களவுமாக பிடித்து விட்டேன். என்னை பார்த்ததும் என்னுடைய உள்ளாடையை அங்கேயே போட்டு விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டான் என்று கூறியுள்ளார் ஜெனிஃபர் லாரன்ஸ்.
இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு நபர்களை என்ன செய்வது..? என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் ஜெனிஃபர் லாரன்ஸ். இன்னும் சிலர் இவர் தன்னுடைய விளம்பரத்திற்காக இப்படி கூறுகிறார் என்றும் கூட எதிர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.