பிரபல பின்னணி பாடகியான ஜொனிடா காந்தி இசையமைப்பாளர் அனிருத்தை காதலிப்பதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்றும் கோடம்பாக்கம் கோடங்கிகள் சில தகவல்களைக் கூறுகின்றனர்.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜொனிடா காந்தி காந்தியிடம் சூர்யா அல்லது இருவரில் யாரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ஜொனிடா காந்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ஒரு பதிலைக் கூறினார். அதாவது சூர்யாவிற்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டது இப்பொழுது கல்யாணம் ஆகாமல் இருப்பது அனிருத் தான்.
எனவே கல்யாணம் செய்துகொள்ளச் சொன்னால் நான் அனிருத்தை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பதில் கூறி வதந்திக்கு மேலும் வலு சேர்த்து விட்டார்.
இந்த விவகாரம் இணைய இளசுகள் வட்டத்தில் நமட்டு சிரிப்புடன் பேசப்பட்டு வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சினிமாவில் ஹீரோயினாக முயற்சியில் இருக்கும் ஜொனிடா காந்தி அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது கீழ் உதட்டிற்கு ஒரு வண்ணமும் மேல் உதட்டுக்கு ஒரு வண்ணமும் பூசிக்கொண்டு நாக்கை நீட்டியபடி இருக்கும் அவரது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? ச்சைக்..! என்று கலாய்த்து வருகின்றனர்