பிக்பாஸ் 6 : ஜொர்த்தால என்ற பாடல் மூலம் இணையவாசிகள் மத்தியில் பிரபலமான அசல் கோளாறு என்பவர். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
26 வயது நிரம்பியுள்ள இவர் பிக்பாஸ் வீட்டில் செய்யக்கூடிய சேட்டைகள் ரசிகர்களை எரிச்சலை கிளப்பி இருக்கிறது என்று தான் கூற வேண்டும். முன்னதாக, பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பருத்திவீரன் சித்தப்பு சரவணன் தன்னுடைய இளம் வயதில் செய்த விஷயங்களை வெளிப்படையாக கூறி இதன் காரணமாக நீங்கள் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை செய்து இருக்கிறீர்கள் எனவே பிக்பாஸ் வீட்டில் உங்களால் மேற்கொண்டு தொடர முடியாது என்று ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
இது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயே இப்படி தடவிக் கொண்டு திரியும் கோளாறுக்கு என்ன கார்டு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
மேலும் இவர் பாடிய ஜொர்த்தால பாடலில் இடம்பெற்ற “ஒத்த ஓடு இல்லாத வூட்டுக்கு பாக்குறான் பூசு வேல..” என்ற வரிகள் மேற்கோள் காட்டி இதுதான் அந்த பூசு வேலையா..? என்று விளாசி வருகிறார்கள் ரசிகர்கள்.
மட்டுமில்லாமல் ஏற்கனவே பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகையும் செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு தன்னுடைய இணையப் பக்கத்தில் ஒரு மீம் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் யார் சார் இவன் எங்கிருந்து புடிச்சுட்டு வந்தீங்க..? எப்போ பார்த்தாலும் எதையாவது நோண்டிக்கிட்டே இருக்கான்..! என்று இவர் பேசும் வசனம் இணைக்கப்பட்டு இருக்கிறது.
இப்படி கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் அசல் கோளாறின் லீலைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் முதல் சீசனில் பிரபல நடிகர் நாடோடிகள் படத்தில் நடித்த நடிகர் பரணி பெண் போட்டியாளர்கள் உடை மாற்றும் பொழுது எதேச்சையாக அங்கே சென்று விட்டார் என்று கூறி அவருடைய ஒட்டுமொத்த கேரக்டரையும் டேமேஜ் செய்து அவரை வீட்டை விட்டு ஓடும் அளவிற்கு செய்தார்கள் பெண் போட்டியாளர்கள்.
View this post on Instagram
ஆனால் தற்பொழுது நடப்பதை பார்த்தால்.. அவர்கள் எல்லாம் என்ன பெரிய தவறு செய்துவிட்டார்கள் என்று வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு தொந்தரவு கொடுத்தார்கள் என்ன தோன்றுகிறது என்று பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.