தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் சூரியா-ஜோதிகா..! – இது தான் காரணமாம்..! – ரசிகர்கள் அதிர்ச்சி..!

 90களில் மிகவும் பிரபலமான டாப் கதாநாயகிகளின் வரிசையில் சூப்பர் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஜோதிகா  தமிழ் தெலுங்கு ஹிந்தி மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

 கடந்த 2006ஆம் ஆண்டு உருகி உருகி காதலித்த தனது சூரியாவை பலர் எதிர்ப்புக்கு மத்தியில்  சிவகுமார் வித்திட்ட கண்டிஷனுக்கு உடன்பட்டு கரம்பிடித்தார்.

அந்த  கண்டிஷன் என்ன என்றால் திருமணத்திற்கு பின்பு திரைப்படத்தில் நடிக்க கூடாது என்பதுதான். ஆரம்ப நாட்களில் அந்த கண்டிஷனை ஜோதிகா பின்பற்றி வந்தார் பின்பு நாட்கள் செல்ல செல்ல இவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்த போது அதற்கான பச்சைக் கொடியை அவரது கணவர் சூர்யா காட்டிவிட்டார்.

 இதனைத் தொடர்ந்து இவர் 36 வயதினிலே படத்தில் நடித்து அசத்தியிருப்பார். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து 2டி என்டர்டெயின்மென்ட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி அதில் தனது மனைவியாக ஜோதிகாவை  நிர்வகிக்கும் படி சூர்யா செய்தார்.

 தொடர்ந்து இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று படம் தேசிய விருதை பெற்றது பெற்றதோடு ஜோதிகாவுக்கும் சிறந்த தயாரிப்பாளர் விருதை பெற்று தந்தது.

 36 வயதினிலேவைத் தொடர்ந்து நாச்சியார் ராட்சசி பொன்மகள்வந்தாள் செக்கச் சிவந்த வானம் போன்ற படத்தில் நாயகியாக வெளிவந்து புகழ்பெற்ற ஜோதிகா தற்போது தனது நிறுவனத்தை பாலிவுட் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பி இருப்பதால் தற்போது இவர் மும்பை குடிபெயர்ந்து செல்ல திட்டமிட்டிருக்கிறார்.

 இதன் மூலம் இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்த இவர்களது குடும்பம் இரண்டாகி தற்போது இவர்கள் மும்பைக்கு செல்வது உறுதியாகிவிட்ட நிலையில் அங்கு அவர்கள் எடுத்த  புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த தம்பதிகள் மாபெரும் வெற்றியை தந்த சூரரைப்போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் தற்போது இணையத்தில் வந்துள்ளது. எனவே இது நிமித்தமாக இவர்கள் மும்பை சென்று இருக்கலாம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …