வெற்றி மேல் வெற்றி வந்து என்னை சேரும்… மீண்டும் பாலிவுட்டில் களம் காண இருக்கும் ஜோதிகா…!!

ஹிந்தி திரை உலகில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர்தான் ஜோதிகா, இவர் ஹிந்தியில் நடித்த முதல் படம் டோலி சஜா கே ரக்கீனா. இந்தப் படத்திற்குப் பின் தமிழில் 2001 ஆம் ஆண்டு இவர் லிட்டில் ஜான் என்ற படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டார்.

 இதன்பிறகு தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் நடிகர்  சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில்  திருமணத்திற்குப் பின்பு சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் மீண்டும் கணவரின் துணையோடு ரீஎன்ட்ரி கொடுத்து அட்டகாசமான படங்களில் நடித்து வருவதோடு படங்களை இயக்கவும் தயாரிக்கவும்  இருக்கிறார்.

 இந்த வரிசையில் இவர் தயாரித்து வழங்கிய சூரரைப் போற்று படமானது தேசிய விருதை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து இவர் 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

 இந்தப் படமானது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற ஒரு தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்க கூடிய படமாக இருக்கும் இதில் தொழிலதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கிறார். அவரது மனைவியாக தான் ஜோதிகா நடிக்க இருக்கிறார். மேலும் இந்தப் படத்தை துஷார் இத்ராணி இயக்குகிறார்.

 தற்போது தான் ஜோதிகா மலையாளத்தில் தயாராகும் மம்முட்டியுடன் இணைந்து நடித்த வருகிறார். குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஜோதிகா மீண்டும் 12 ஆண்டுகள் இடைவெளக்கிப் பிறகு தற்போது இவர் மம்முட்டியுடன் ஜோடி சேர்ந்து மலையாளத்தில் நடிக்கிறார்.

மேலும் இவர் 12 ஆண்டுகளுக்கு  முன்பு சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தில் ஜெயராமுடன் ஜோடி சேர்ந்து நடித்திருப்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இதை அடுத்து ரசிகர்கள் வெற்றி மீது வெற்றி உன்னை வந்து சேரும் அதை வாங்கித் தந்த பெருமையெல்லாம் சூர்யாவை சேரும் என்று வசனங்கள் பேசுவதோடு பாடலிலும் இவர்களை நக்கல் செய்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …