விஜய்-யை தூக்கி எறிந்த நடிகை ஜோதிகா..! – படப்பிடிப்பு தளத்தில் சொல்லிக்கொள்ளாமல் ஓடிச்சென்ற சம்பவம்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடன் குஷி மற்றும் திருமலை என இரண்டு மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஜோதிகா.

குறிப்பாக குஷி திரைப்படம் நடிகர் விஜய்க்கு ஜோதிகாவுக்கும் மிகப்பெரிய திருப்புமுறையாக அமைந்தது. அந்த அளவுக்கு இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் வரவேற்பு பெற்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வந்து நடிகை ஜோதிகா ஒரு கட்டத்தில் நடிகர் சூர்யாவை காதலித்து அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் குழந்தைகள் குடும்பம் என சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது நடிகர் விஜயுடன் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்னுடைய காட்சிகளுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நடிகை ஜோதிகா கூறியிருக்கிறார்.

ஆனால் இயக்குனர் மறுக்கவே நடிகர் விஜய்யிடம் கூட கூறாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து கிளம்பி சென்று இருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அது என்ன படம் என்று பார்க்கலாம். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகா தான் முதலில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் இந்த கதாபாத்திரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் விதமாக இருக்கிறது. படத்தில் தனக்கான காட்சிகள் அதிகமாக இருக்க வேண்டும் இன்னும் இந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.

அப்படி செய்தால் படத்தில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியதற்கும் படத்தின் நீளமும் அதிகமாகும் என கூறி இருக்கிறார் இயக்குனர் அட்லி. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை ஜோதிகாவுடன் நடிக்க இருக்கும் மகிழ்ச்சியில் இருந்த நடிகர் விஜய்க்கு இது குறித்து ஏமாற்றமாக அமைந்திருக்கிறது.

காரணம் படத்தின் கதையில் மாற்றம் செய்ய அட்லீ ஒப்புக்கொள்ளாததால் படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய்யிடம் கூட கூறாமல் கிளம்பி சென்றிருக்கிறார் நடிகை ஜோதிகா.

அதன் பிறகு நடிகை நித்யா மேனனை இவருடைய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். நடிகை ஜோதிகா நடிகர் விஜயின் படம் என்று கூட பார்க்காமல் படத்தின் கதையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று படபிடிப்பு தளத்தில் விஜயிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் கிளம்பியது விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …