தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை காஜல் அகர்வால் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைவே தன்னுடைய நண்பரும் சாதகமான தொழில் அதிபர் கௌதம் கிச்சுலி என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார் .த
ற்போது அழகான ஆண் குழந்தை ஒன்றுக்கு தாயாகி உள்ளார். திருமணத்திற்கு பிறகும் கட்டுக் குலையாத தன்னுடைய அழகை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி குஷிப்படுத்தி வருகிறார் அம்மணி.
இதனால் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என தெரிகிறது என மகிழ்ச்சியில் இருந்தனர் அவரது ரசிகர்கள். ஆனால் தற்போதைக்கு சினிமாவில் நடிக்கக் கூடிய எண்ணமில்லை சிறிது காலம் குழந்தை மற்றும் அவனுடைய வளர்ச்சியில் கவனம் செலுத்தி உள்ளேன்.
குழந்தையுடன் இருந்து கவனிப்பதை விட பணம் சம்பாதிப்பது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால், குழந்தையை எப்போது வேண்டுமானாலும் வளர்க்க முடியாது அவனுடைய இந்த குழந்தை பருவத்தை சிறப்பானதாக அவனுக்காக என்னுடைய ஒட்டுமொத்த நாட்களையும் செலவிட உள்ளேன் என்று பேசியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் காஜல் அகர்வால்.
தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் டேபிளில் உள்ள கேக்கின் மீது இருக்கும் கிரீம் உருகி ஊற்றுவது போல உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் செல்லத்தோட சூட்டுல.. அதுவா உருகி ஊத்துது.. என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்