“ஆத்தாடி.. காம பார்வையால்ல இருக்கு..” – கண் பார்வையால் கதற விடும் காஜல் அகர்வால்..!

சமீபத்தில் தொழிலதிபரும் மற்றும் தன்னுடைய நீண்ட நாள் காதலருமான கௌதம் கிச்சுலு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நடிகை காஜல் அகர்வால் தற்போது நீல் கிச்சுலு என்ற மகனுக்கு தாயுமாய் இருக்கிறார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தன்னுடைய மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய மகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உன் அம்மாவாக இருப்பது மிகவும் சவாலாக இருக்கிறதடா.. என்று ஒரு பதிவை பதிவு எழுதியுள்ளார்.

மேலும், பேசிய அவர் என் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த ஆறு மாதங்கள் எப்படி போனது என்று கூட எனக்கு தெரியவில்லை. பயந்து கொண்டிருந்த ஒரு பெண்ணாக இருந்தபோது என்னை அம்மாவாக மாற்றிய பெருமை உனக்கு தானடா..! என்று தன்னுடைய குழந்தையின் மகிழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

என்னுடைய தொழில் வேலைகள் இருந்தாலும் கூட ஒரு அம்மாவாக நேரம், கவனிப்பு, அன்பு, உணவு போன்றவற்றை உனக்கு சரியாக கொடுக்கிறேனா..? அது உனக்கு போதுமானதாக இருக்கிறதா..? என்பது எனக்கு ஒரு சவாலாக இருக்கிறது.

என்னுடைய கவனிப்பு எப்படி இருக்கிறது..? என்று நீ கூற நான் தெரிந்து கொள்ள ஆசையாக இருக்கிறேன். நீ என்ன கூறினாலும்.. அதனை மகிழ்ச்சியாக நான் ஏற்றுக் கொள்வேன்.. என்று கூறியிருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன நடிகை காஜல் அகர்வால் தற்போது கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்திருக்கிறார்.

மட்டுமல்லாமல் இந்தியன்-2 படத்தில் நடிப்பதற்காக தயாராகிக் கொண்டு வருகிறார் சமீபத்தில் களரி பயிற்சி மற்றும் குதிரை சவாரி பயிற்சி என படத்திற்கு தேவையான சில பயிற்சிகளை மேற்கொண்டார்.

விரைவில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார் நடிகை காஜல் அகர்வால் மட்டுமில்லாமல் தமிழில் ஒரு படம் மற்றும் தெலுங்கில் மூன்று படங்கள் என மொத்தம் நான்கு படங்களில் ஹீரோயினாகவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

குழந்தை பிறந்த பிறகும் தன்னுடைய நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், தன்னுடைய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆத்தாடி காம பார்வையால்ல இருக்கு என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …