ப்பா.. ஒரு குழந்தைக்கு அம்மா-வான பிறகும் இம்புட்டு கவர்ச்சியா..? – ஏக்கப்பெருமூச்சு விட வைத்த காஜல் அகர்வால்..!

தமிழைப் பொருத்தவரை இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி படத்தின் மூலம் தமிழில் பிரபலமான நடிகையாக போற்றப்பட்டவர் காஜல் அகர்வால்.

இவர் தல அஜித் உடன் விவேகம் படத்திலும் விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் போன்ற படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சூர்யாவுடன் இணைந்து மாற்றான் கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் அழகுராஜா தனுஷுடன் மாரி ஜெயம் ரவியோடு கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

மாபெரும் விக்ரம் வெற்றிக்குப் பிறகு தற்போது இந்தியன் இரண்டு படத்தில் நடித்து வரும் கமலஹாசனுக்கு ஜோடியாக இவர் இந்தியன் இரண்டு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவான கோஷ்டி எனும் படமும் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் க்கு தயாராகி உள்ளது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இவர் தொழில் அதிபர் கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து கடந்த மாதம் 19 .4 .2022 அன்று இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நெய்ல் என பெயரிட்டு இருக்கிறார்கள்.

குழந்தை பிறந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார். இதனை அடுத்து தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது நாய்க்குட்டியுடன் குழந்தை நெய்ல் விளையாடும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிக வைரலாக பரவி வருகிறது. மேலும் நாய்க்குட்டிக்கு ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு தனது குழந்தைக்கும் அவர் முத்தத்தை பகிர்ந்து இருக்கும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரவுன் மற்றும் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் எந்த நாய்க்குட்டியும் பார்க்க மிகவும் அழகாக இருப்பதோடு அது கொடுத்திருக்கும் போஸையும் ரசிகர்கள் அனைவரும் தற்போது கலாய்த்து பேசி வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்த புகைப்படத்துக்கு அதிக அளவு கமெண்டுகளை போட்டு ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவை தெரிவித்து விட்டார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …