முதன்முதலில் அது நடந்த போது கடுமையான வலியை அனுபவித்தேன் – ரகசியம் உடைத்த கஜோல்..!

பிரபல நடிகை கஜோல் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கையில் கொடுத்த பேட்டியின் படி தன்னுடைய முதல் அனுபவத்தின் பொழுது கடுமையான வலியை அனுபவித்தேன்… தாங்க முடியாத வலியை அனுபவித்தேன்.. தயவுசெய்து இப்படியான விஷயங்களுக்காக பெண்களை குற்றம் சுமத்தாதீர்கள் என்று தன்னுடைய ரகசியமாக சில விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைத்திருக்கிறார்.

இந்தி திரை உலகில் பிரபலமான ஸ்டார் ஜோடி என்றால் அது அஜய்தேவ்கான்-கஜோல் தம்பதி எனக்கூறலாம். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக இவருடைய வாழ்க்கை கழிந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் கடுமையான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிஇருந்தது.

அதுதான் நடிகை கஜோலுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நடிகை கஜோல் சில மாதங்களில் கருச்சிதைவு ஆனதால் ஏற்பட்ட வலி மற்றும் வேதனைகள் குறித்து தன்னுடைய பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு எனக்கு முதல் கருச்சிதைவு ஏற்பட்டது. கபி குஷி கபி கம் என்ற திரைப்படத்தில் நடிதிருந்தேன். அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

ஆனால், அந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் அப்போது இல்லை. அதற்கு முக்கியமான காரணம் என்னுடைய கருச்சிதைவு தான். அதன் பிறகு இன்னொரு முறை கருச்சிதைவு நடந்தது என்றாலும் முதன் முதலாக கருச்சிதைவு நடந்தபோது நான் மிகவும் சிரமப்பட்டேன்.

தாங்க முடியாத வலி.. ஆனாலும் மீண்டு வந்திருக்கிறேன். தற்போது என் கணவர் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் கருச்சிதைவுக்கு ஆளான அவர்களை நம் நாட்டில் ஒதுக்கி வைக்கும் போக்கு சில இடங்களில் இருக்கிறது.

அவர்களை தனிமைப்படுத்தி தங்கள் குடும்பத்தினரே கூட அசிங்கமாக பார்க்கிறார்கள். அவர்களை அவமானமாக உணர வைக்கிறார்கள். இது நிச்சயமாக சரியான விஷயமாக இருக்க முடியாது. இது மிகப்பெரிய தவறு.

கருச்சிதைவுக்கான பெண்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் மறுபக்கம் அவர்களுடைய உடலும் பாதிக்கப்பட்டிருக்கும். இந்த நிலையில், அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர அவர்கள் மீது ஒரு குற்ற உணர்வை விதைப்பது நிச்சயமாக சரியான விஷயமாக இருக்காது. தயவுசெய்து அப்படியான விஷயங்களை செய்யாதீர்கள் என்று கூறியிருக்கிறார் நடிகை கஜோல்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …