கழற்சிக்காய்:இன்று இருக்கும் இளம் பெண்களுக்கு கருப்பை சார்ந்த பிரச்சனைகள் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. இதற்கு காரணம் துரித உணவுகளை உண்ணுவது, உடல் உழைப்பு இன்மை, உடலில் ஹார்மோன்களால் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வு மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை கூறலாம்.
இது போன்ற கோளாறு இருக்கக்கூடியவர்கள் இந்த பிரச்சனைகளை எளிதில் சரி செய்ய கழற்சிக்காய் சாப்பிட்டால் போதுமானது.
அது சரி, இந்த கழற்சிக்காயை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு இப்போது கூறுகிறேன். அதை பயன்படுத்தி நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் கட்டாயம் பலன் கிடைக்கும்.
கழற்சிக்காயை எடுத்து இடித்து உள்ளே இருக்கும் பருப்புகளை தனியாக எடுத்துக்கொண்டு அதனை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு ஸ்பூன் கழற்சிக்காய் பொடியோடு, கால் ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் தேன் சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை தவறாமல் சாப்பிடுங்கள்.
Kalarchikaiஅப்படி தேனோடு கலந்து சாப்பிட முடியாதவர்கள், இந்த கழற்சிக்காய் பொடியோடு, மிளகையும் சேர்த்து ஒரு டம்ளர் மோரில் குடிக்கலாம்.
இந்த முறையை குறைந்த பட்சம் தொடர்ந்து 48 நாட்கள் நீங்கள் தவறாமல் எடுத்துக் கொள்வதின் மூலம் உங்கள் கருப்பையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எளிதில் நீங்கி நீங்கள் விரைவில் கருத்தரிக்க கூடிய வாய்ப்பு ஏற்படும்.
Kalarchikaiஅது மட்டுமல்லாமல் மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லாமல் இருக்கக்கூடிய திருமணம் ஆன பெண்கள் அனைவரும் இந்த முறையை பயன்படுத்தி பார்க்கலாம்.
மேலும் கர்ப்பப்பையில் இருக்கின்ற நீர் கட்டி மற்றும் ஃபைப்ராய்டு பிரச்சனைகள் இருப்பவர்கள் குறைந்தபட்சம் 90 நாட்களாவது எந்த மருந்தினை சாப்பிட வேண்டும்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்களும், மாதவிடாயை சீராக்க நினைப்பவர்களும், பிசிஓடி, பிசிஓஎஸ் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களும் இதனை உட்கொள்வதின் மூலம் நன்மை கிடைக்கும்.
Kalarchikaiமேலும் அதிக அளவு மாதவிடாய் சமயத்தில் உதிரப்போக்கு இருப்பவர்கள் இந்த மருந்தை சாப்பிடக்கூடாது. அதேபோல் மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் பிசிஓஎஸ் மற்றும் பிசி ஓடிக்கும் மாத்திரை சாப்பிடுபவர்கள் இதை இந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம்.
இந்த மருந்தை நீங்கள் சாப்பிடும் போது உணவு மாதுளை, உலர் பழங்கள் போன்றவற்றை அதிகளவு சேர்த்துக் கொள்வதோடு யோகா, வாக்கிங் செல்வது மிகவும் நல்லது. இது உங்கள் கருத்தரிக்கலை இன்னும் அதிகப்படுத்தும்.
உடலில் வேறு ஏதாவது பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையை பெற்று இந்த மருந்தினை உட்கொள்வது நல்லது.