இதனால் வீட்டை விற்று விட்டேன்.. இப்போ வாடகை வீட்டுல இருக்கேன்..! – கண் கலங்கும் கஞ்சா கறுப்பு..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கஞ்சா கறுப்பு என்று பிரபலமானவர் நடிகர் கஞ்சா கறுப்பு.

இவருடைய உண்மையான கறுப்பு ராஜா என்பதாகும். இவருடைய இயற்கையான பெயர் ராஜா. இவர் சிறு வயது முதலிலேயே கறுப்பாக இருந்ததால் கறுப்பு ராஜா என்று அழைக்கப்பட்டு இருக்கிறார்.

பிதாமகன் திரைப்படத்தில் கறுப்பு ராஜா என்று அறிமுகமானார். ஆனால் இவருடைய கதாபாத்திரம் எந்நேரமும் கஞ்சா அடித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு கதாபாத்திரம் எனவே கஞ்சா கறுப்பு என்று ரசிகர்களால் அறியப்பட்டார்.

அதனை தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் அந்த படங்களில் எல்லாம் கஞ்சா கறுப்பு என்று அடையாளப்படுத்தப்பட்டார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சினிமா மூலம் புகழை மட்டுமல்லாமல் நிறைய பணத்தையும் சம்பாதித்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் பட தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். அதற்கு முன்பு வரை வீடு குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி இருந்த கஞ்சா கறுப்பு பல பொதுநல உதவிகளையும் செய்திருக்கிறார்.

அந்த வகையில் பள்ளிகளுக்கு உதவி செய்வது.. ஏழை எளியவருக்கு உதவி செய்வது.. என தொடர்ந்து தன்னுடைய தயாள குணத்தை வெளிக்காட்டி வந்தார் கஞ்சா கறுப்பு. ஆனால், இவருக்கு பட தயாரிப்பில் புகுந்தது மிகப்பெரிய சோதனை காலமாக அமைந்தது.

இவர் தயாரிப்பில் சில திரைப்படங்கள் வெளியாகின. ஆனால், அந்த திரைப்படங்கள் அனைத்துமே தோல்வி அடைந்ததால் இவருக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகர் கஞ்சா கறுப்பு சினிமாவில் சூதனமாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால் சூதுவாது தெரியாமல் இருந்து விட்டேன் எந்த சினிமாவால் எனக்கு பணம் பேர் புகழ் கிடைத்ததோ அதே சினிமாவால் அனைத்தையும் நான் இழந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

இதனை அறிந்த ரசிகர்கள் இப்படி ஒரு சிறப்பான கலைஞருக்கு இந்த நிலைமையா..? சினிமா மட்டுமல்ல.. வாழ்க்கையின் எந்த தொழிலாக இருந்தாலும் சரி.. எந்த வேலையாக இருந்தாலும் சரி.. நேக்கு போக்கு தெரியாமல்… சூதுவாது தெரியாமல்.. இருந்தால் இதே நிலைதான் அனைவருக்கும் என்று கூறி வருகின்றனர்.

கஞ்சா கறுப்புவின் இந்த பேட்டி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது என்றாலும் கூட பொதுவான ரசிகர்களுக்கு வாழ்க்கையில் பணம் சேர்த்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும் என்று புரிய வைப்பதாக இருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள்.

Summary in English : Kanja Karuppu, a Tamil actor, recently made headlines when he had to sell his house to pay off debts he incurred while trying to produce a movie. This ultimately resulted in a huge financial loss for him and forced him to take such drastic action.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …