நல்ல தரமான கதைகள் அமையும் பட்சத்தில் திருமணத்துக்குப் பின்னாலும் பாலிவுட் நடிகைகள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கரீனா கபூர் தனது புதிய படப்பிடிப்பிற்காக மும்பையில் இருந்து லண்டன் செல்ல விமான நிலையம் வந்த போதுதான் அந்த சம்பவம் நடந்துள்ளது.
சற்றும் எதிர்பாராத நிலையில் இந்த சம்பவமானது கரீனா கபூரின் பேஸ் ரியாக்சன்னை முற்றிலும் மாற்றியது. இதற்கு காரணம் இவரது ரசிகர்கள் தான்.
பொதுவாகவே தற்போது ரசிகர்கள் பொது இடங்களில் தங்களுக்கு இஷ்டமான நடிகர்களோடு இணைந்து செல்பி எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு எல்லா நடிகர்களும், நடிகைகளும் ஒத்துழைப்பு அளித்த வண்ணம் இருக்கிறார்கள்.
எனினும் சில சமயங்களில் இது அத்துமீறலை ஏற்படுத்தி நடிகைகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது. இந்தச் சம்பவமானது ஒர் இரு நாட்களுக்கு முன்பாக கரீனா கபூர் மும்பை விமானத்தில் எனது மகன் மற்றும் பாட்டியுடன் வந்தபோது நடந்திருக்கிறது.
இவர்கள் விமான நிலையத்தில் நின்றிருந்தபோது குறிப்பிடும் படியாக ஒரு ரசிகர் அத்துமீறி செல்பி எடுக்க வேகமாக வந்ததோடு, கரீனா கபூரின் தோள் மீது கை வைக்க முயற்சி செய்வது போல் போஸ் கொடுக்க நினைத்து செயல்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து நடிகை யின் பாதுகாவலர் ரசிகரின் கையை தடுத்து விடுவது போன்ற காட்சிகள் உள்ள வீடியோ வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வீடியோவில் மிகவும் சிரமப்பட்டு கரீனாகபூர் அந்த ரசிகர்களிடம் இருந்து விடுபட்டு செல்வதற்காக பயந்த நிலையில் அவரது முகத் தோற்றங்கள் மாறிய நிலையில் அவர் நகர்ந்து சென்றது பதிவாகி உள்ளது.
எனவே ரசிகர்கள் இடம், பொருள், ஏவல் அறிந்து அதற்கு தகுந்த படி செயல்பட வேண்டும். இல்லை என்றால் எவ்வளவு பெரிய நடிகை என்றாலும் அவருக்கு அந்த சமயத்தில் அசௌகரியம் ஏற்படும் என்பதை புரிந்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
இதை பார்த்தாவது ரசிகர்கள் இனி யோசித்து நடந்து கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்த்தால் நமக்கு விரைவில் தெரியவரும்.