16 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் திரையுலகை தன் கைவசத்தில் வைத்திருந்த கதாநாயகி லைலா மீண்டும் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இந்த படமானது முழுக்க முழுக்க திரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரக்கூடிய இந்தப் படத்தில் மங்கை என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை லைலா நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் தான் படத்தின் திருப்புமுனை என்று கூறுகிறார்கள்.
முதன் முதலில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான லைலா, அதன் பிறகு சூர்யாவுடன் நந்தா, உன்னை நினைத்து, பிரியா பிதாமகன் மௌனம் பேசியதே போன்ற ஹிட் படங்களை தந்தார்.
1990 களில் இவர் தமிழ் திரையுலகின் கனவுக் கன்னியாக திகழ்ந்திருக்கிறார் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வந்த போதிலும் அஜீத்துடன் ஒரு பாடலில் நடனமாடி இருந்ததை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சூர்யாவின் தம்பியோடு இவர் இணைந்து நடிக்க இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு மீண்டும் திரையுலகை ஒரு கலக்கு கலக்குவார் என்று அனைவரும் கூறுகிறார்கள்.
ஈரான் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட லைலாவுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்களும் இவர் தற்போது கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன் நடித்த படம் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கக்கூடிய எந்த படமும் சக்கை போடு போடும் என்று அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
நடிகர் சூர்யா உடன் பாலா இயக்கத்தில் லைலா கலக்கி இருந்த நடிப்பையும் மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள். மேலும் தற்போது தம்பியுடன் இணைந்து நடிப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது என்று கூற அந்த அளவுக்கு லைலாவின் ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலோடு எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த படத்தை வெற்றிப்படமாக நிச்சயமாக மாற்றுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.