பிரபல நடிகை கஸ்தூரி ( Kasthuri ) தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
kasthuriஅதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக உருவெடுத்திருக்கிறார்.குறிப்பாக நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து முதல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.அதன் பிறகு நடிகர் கமலஹாசன் நடித்திருந்த இந்தியன் திரைப்படத்தில் அவருடைய மகளாக நடித்திருந்தார்.
இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை கஸ்தூரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
kasthuriசமீப காலமாக இணைய பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி கொண்டிருக்கும் கஸ்தூரி அவ்வப்போது சமூகம் சார்ந்த தனது நிலைப்பாட்டையும் கூறி வருகிறார். இதனால் அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி கொள்கிறார் அம்மணி.
இந்நிலையில்,சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசியர் ஹரி பத்மன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றசாட்டுகள் எழுந்தன. தொடர்ச்சியாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மநாபன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
kasthuriஇந்நிலையில், ஹரி பத்மன் கைது செய்யப்பட்டதை கிண்டலாக பதிவிட்டதோடு தன்னை டேக் செய்து கேள்வி எழுப்பிய நெட்டிசனுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். அந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Kalakshetra பெண்களுக்கு நீதியை விட யார் என்ன ஜாதி என்பதே த்ராவிடியான்ஸ்சுக்கு முக்கியமாக உள்ளது. Hari padman அய்யர் இல்லை. நீர்தான் பொய்யர். ரொம்ப கேவலமானவர்.
Dravidiyas for a reason! பி. கு: ஒருவர் மாமியென்றால் no problem. உன்னை போல் மாமாவாக இருப்பது தான் அசிங்கம்” என்று இவ்வாறு கொந்தளித்துள்ளார் கஸ்தூரி.