நடிகை கஸ்தூரி சமீபகாலமாக சினிமா மற்றும் அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசை கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது மின் கட்டண உயர்வு குறித்து கவலைப்பட வேண்டாம் இது எதிர்பார்த்ததுதான் கரண்ட் பில் அதிகரிக்கா வண்ணம் அரசாங்கம் அடிக்கடி பவர் கட் செய்து மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது. என நையாண்டி செய்யும் விதமாக ஒரு கருத்தைக் கூறி விடியல் ஆட்சி தமிழ்நாடு என்ற ஹேஸ் டேக்கையும் பதிவு செய்து இருந்தார்.
அன்றாடம் அரசியல் மற்றும் சினிமாவில் நடக்கும் நிகழ்வுகளை குறித்து கருத்துக்களை பதிவு செய்து வரும் நடிகை கஸ்தூரியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது மாம்பழம் சாப்பிடும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எச்சில் ஊறுதே என்று சொல்லிவிட்டு வருகின்றனர்.