இந்த அக்கப்போருக்கு தான் இங்க வரதே இல்ல..! – கடுப்பான தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா..!

பிரபல இயக்குநர்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசுவிடம் உதவி இயக்குனராக வேலை செய்த இயக்குனர் கஸ்தூரி ராஜா பல கிராமிய படங்களை எடுத்து மக்கள் முன் பிரபலமானவர்.

இவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்து பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வசூலை வாரி குவித்தது.இதனை தொடர்ந்து ஆத்தா உன் கோவிலிலே, நாட்டுப்புறப்பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆசை ராசாவே உட்பட நிறைய படங்களை இயக்கி உள்ளார்.

 இவருக்கு செல்வராகவன் தனுஷ் என்று இரண்டு மகன்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே இரண்டு மகன்களும் தற்போது திரையுலகில் மிக முக்கியமான அந்தஸ்தில் இருக்கிறார்கள் இளைய மகன் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து பிரிந்து வாழ்கிறார்கள்.

 இதுபோலவே மூத்த மகனான இயக்குனர் செல்வராகவன்  சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு தற்போது கீதாஞ்சலி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.

 தனது தம்பியான தனுசை இயக்குனரான செல்வராகவன் தான் முதன்முதலில் திரைப்படத்துறையில் அறிமுகம் செய்து வைத்தா.ர் அதனைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் எல்லாம் மிக நல்லமுறையில் ஓடியது.  17 ஆண்டுகளாக அவர்கள் இருவரும் இணைந்து எந்த படத்தையும் செய்யாத நிலையில் தற்போது  இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவரவுள்ள படம் தான் நானே வருவேன். என்ன படம் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளிவர உள்ளது.

 இதனை அடுத்து கஸ்தூரிராஜா ஒரு பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட போது இந்தப்படம் பற்றிய நிறைய கேள்விகள் எழுப்பப் பட்டது அதற்கு மிகவும் பொறுமையாக பதிலளித்தார். கஸ்தூரிராஜா இந்த படம் நிச்சயம் ஒரு வெற்றி படமாக தனது மகன்களுக்கு இருக்கும் என்று கூறினார். மேலும் தனது மகனான தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க எந்த விதமான எண்ணமும் தனக்கு இல்லை என்று கூறினார்.

 போட்டி என்பது திரையுலகில் சகஜம்தான். நல்ல நிலையில் எடுக்கப்பட்ட படம் எதுவாகிலும் வெற்றிபெறும். அதுபோல்தான் நானே வருவேன் பொன்னியின் செல்வனும் திரைக்கு வந்த பின்னர்தான் எதுவும் தெரியும் என்பதுபோல கூறினார்.

 சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் என்பதெல்லாம் முக்கியமல்ல திரைக்கதை வலுவாக அமைந்தது ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் அதை பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக அவர்கள் நிச்சயம் மாற்றுவார்கள்.

 இப்படி அவர் பேசிக் கொண்டிருந்த வேளையில் ஒரு செய்தியாளர் அவரை நோக்கி இது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றிய கேள்வியை கேட்ட உடனே மனிதன் மிகவும் டென்ஷனாகி விட்டார். அந்த செய்தியாளருக்கு அவர் பதிலளிக்கும்போது இதனால்தான் நான் பிரஸ்மீட்டில் கலந்து கொள்வதே இல்லை ஏற்கனவே கூறியது போல இது அவர்களுடைய சொந்த விஷயம் அதை பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று தடாலடியாக பதிலளித்து அதன்பின் நார்மல் ஆனார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …