தமிழில் ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி நடிகர் சத்யராஜ் மணிவண்ணன் கூட்டணியில் வெளியான அமைதிப்படை திரைப்படத்தில் தாயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த கதாபாத்திரம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது என்றுதான் கூறவேண்டும். காரணம், அமைதிப்படை திரைப்படம் அன்றைய அரசியல் சூழ்நிலையை மையமாக கொண்டு அன்றைய அரசியல் சூழ்நிலையை கலாய்க்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டு சாட்டை சுழற்றியது.
இந்த திரைப்படம் பொதுமக்களும் ரசிகர்களும் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தில் வரக்கூடிய ஒவ்வொரு அரசியல் வசனங்களும் இன்றைய அரசியல் களத்தில் எடுத்து பொருத்தி பார்த்தால் கூட அப்பட்டமாக அப்படியே பொருந்தும்.
மணிவண்ணனின் இந்த திரைப்படத்தில் மூலம் நிரூபிக்கப்பட்டது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தன்னையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகினார் நடிகை கஸ்தூரி.
அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக இந்தியன்2 திரைப்படத்தில் நடிகர் கமலஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்குப் பிறகு சற்றே சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.
குழந்தைகள் குடும்பம் என என்னுடைய இல்லற வாழ்க்கையில் பிஸியானார் நடிகை கஸ்தூரி. அதன் பிறகு சினிமாவில் மீண்டும் நடிக்க வந்த இவர் சமூக வலைதளப் பக்கங்களில் ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.
சமூகத்தில் நடக்கக்கூடிய சர்ச்சைக்குரிய விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வரக்கூடிய விஷயங்கள் ஆகியவற்றில் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்து தன்னுடைய நிலைப்பாட்டை ஒளியும் இல்லாமல் பொட்டில் அடித்தாற்போல கூறுவதில் கஸ்தூரிக்கு நிகர் கஸ்தூரி தான்.
ஒரு ஆட்சி நடக்கும்போது எறும்பு கடித்தால்கூட கதறும் நடிகர், நடிகைகள்.. அதுவே இன்னொரு ஆட்சி வந்து விட்டால் பாம்பே அடித்தால் கூட சத்தமே போடாமல் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருப்பார்கள்.
அப்படியே நடிகர்-நடிகைகள் உலவிக் கொண்டிருக்கும் நம்முடைய தமிழ்நாட்டில் நடிகை கஸ்தூரி தனித்து நிற்கிறார். யார் ஆட்சியில் இருந்தாலும் சரி தனக்கு சரி என பட்ட விஷயங்களை தயங்காமல் வெளியே கூறுகிறார் நடிகை கஸ்தூரி. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தன்னை இளம் நடிகையாகவே உணர்கிறார் நடிகை கஸ்தூரி என்றே தெரிகிறது.
காரணம் இளம் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவது நடிகை கஸ்தூரியின் பழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது தொளதொளவென்று இருக்கும் ஒரு உடை அணிந்து கொண்டு மொட்டை மாடியில் காற்று தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு நின்றிருக்கும் இவரது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் காத்துக் கொஞ்சம் ஹெவியா அடிச்சா மொத்த மானமும் போயிருக்கும் என்று பதறி வருகின்றனர்.