பிரபல நடிகை கஸ்தூரி கிரிக்கெட் மைதானத்தில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கவர்ச்சியான உடை அணிந்து கொண்டிருக்கும் இவ்வாறு தன்னுடைய பிட்ச் ரிப்போர்ட் எனக்கூறி பவுண்டரி லைனில் நின்று ஆட்டம் போடும் இந்த வீடியோ காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகளின் தொகுப்பாளினியாக நடிகை கஸ்தூரி பணியாற்றி வருகிறார்.
சேலத்தில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் விளையாட்டுப் போட்டிகளில் கஸ்தூரி கலந்து கொண்டு வருகின்றார். இதற்காக கடந்த ஒரு வாரமாக சேலத்தில் தங்கி இருந்தார் கஸ்தூரி.
இந்த டிஎன்பிஎல் இறுதிப் போட்டி நாளை கோயம்புத்தூரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், கோவை கிங்ஸ் மற்றும் சூப்பர் கிங்ஸ் என்ற இரண்டு அணிகள் விளையாட உள்ளனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டி மைதானத்திற்கு வந்துள்ளார். அவர் அங்கே கவர்ச்சியான உடையில் ஆட்டம் போடும் வீடியோ வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள் அவளுடைய அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.