திருமணமான நான்கு மாதம் கூட முடியாத நிலையில் இரட்டை பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நயன்தாராவின் விஷயம் தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது.
இதனையடுத்து ஒவ்வொருவரும் அவரது கருத்துக்களை அவர்களுக்கே உரிய பாணியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை கஸ்தூரி ஏதோ சட்ட புத்தகத்தை படித்தவர் போல தெரிவித்து இருக்கின்ற கருத்து மிக ஓவராக இருக்கிறது. இதனை அவர் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்.
இந்நிலையில் இவர் பேசிய பேச்சுக்கு எதிராக நடிகை சர்ச்சை நாயகி வனிதா பதில் தாக்குதல் கொடுத்துள்ளது தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
பிறப்பு என்பது ஒரு புனிதமான விஷயம் அதை கொண்டாடாமல் இப்படி தாறுமாறாக கஸ்தூரி பேசி வருவதை சர்ச்சை நாயகி கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இருவரும் தற்போது அம்மா அப்பா ஆகி விட்டோம் என்ற போட்ட பதிவை பார்த்து சந்தோஷமாக இருக்காமல் இப்படி சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் தன்னை ஒரு மருத்துவராகவும் வக்கீலாகவும் நினைத்துக்கொண்டு பேசிவரும் கஸ்தூரியின் செயலுக்கு வத்திக்குச்சி பத்த வைப்பது போல அதிரடியாக பதில் தந்திருக்கிறார் நடிகை வனிதா.
மேலும் இவர் நயன்தாரா மற்றும் விக்கி ஜோடிக்கு ஆதரவாக தன்னுடைய கருத்தை கூறி வருகிறார். இதில் சட்டரீதியாக சிக்கல்கள் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில் தற்போது தமிழக அரசும் தலையிட்டு இருப்பது தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை அடுத்து இவர்களின் நிலை என்ன என்பது வரை இருக்கக்கூடிய நாட்களில் ஏற்படும் நகர்வுகளைப் பொறுத்தே நாம் கணிக்க முடியும்.
இந்த விஷயத்தைப் பொறுத்த வரை அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு வழியில்லை என்று சிலர் ஒதுங்கி செல்கிறார்கள்.