கார்த்தி நடித்த மூன்று படங்களில் அடுத்தடுத்து இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளதா?

 தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முதல் பாகம், இரண்டாம் பாகம் என்பது மிகப்பெரிய  கனவாக இருந்த காலகட்டம் மாறிப்போய் விட்டது.

 முதல்  படம் மாபெரும் வெற்றியை தந்திருந்தால் அந்தப் படத்தை இரண்டு மூன்று என்று பாகங்களாக பிரித்து அடுத்தடுத்து வெளியிட்டு வருவது இப்போது ஒரு பேஷனாகி விட்டது.

 இந்த வரிசையில் கமலஹாசன் நடித்த விக்ரம் படம் பற்றி அனைவருக்கும் நன்கு தெரியும். சக்கை போடு போட்ட அந்த படத்தில் இரண்டாவது பகுதி படம் பிடிக்கப்பட்டு தற்போது திரை அரங்கில் வெளியிடப்பட்டது .

இந்த படம் வெற்றியை தந்ததோடு மிகப்பெரிய வசூல் செய்த காரணத்தால் அடுத்த கட்ட நடிகர்களில் முதல் வெற்றிப்படத்தை இரண்டாவது பாகமாக மாற்றுவதற்கு களம் கண்டிருக்கிறார்கள்.அந்த வரிசையில் நடிகர் கார்த்தி நடித்த 3 படங்களில் இரண்டாம் பாகம் மிக விரைவில் வெளிவர உள்ளது.

 ஏற்கனவே பொன்னியின் செல்வன் படம் முதல் பகுதி வெளி வந்து வசூலை வாரி குவித்த தோடு இதன் அடுத்த பகுதி அடுத்த ஆண்டு வெளிவர உள்ள நிலையில் கார்த்தி என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

 அடுத்து இவர் நடித்த கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கிறது. இந்த படமும் மிக விரைவில் வெளிவரும் என்பது தெரிந்ததே.

 இதனை அடுத்து கார்த்தி நடித்து தீபாவளிக்கு வெளிவந்துள்ள சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்று இதன் சக்ஸஸ் மீட்டில் இவர் தெரிவித்தார்.

 இதனை அடுத்து அடுத்து அடுத்து இரண்டாம் பாகம் உள்ள படங்களில் கார்த்தி நடிக்க இருப்பதை அறிந்த ரசிகர்கள் ஹாட்ரிக் வெற்றி என்று இதனை கொண்டாடி வருகிறார்கள்.

 மேலும் தமிழில் அடுத்தடுத்து இரண்டாம் பாகம் படங்களில் வேறு எந்த நடிகரும் இந்த அளவு நடித்ததில்லை என்று சொன்னதை அடுத்து கார்த்தியின் சாதனையாக இதை கருதலாம் என்று அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …