பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் ( Kaushik LM ) மாரடைப்பு காரணமாக சற்று முன் உயிரிழந்துள்ளார். இது சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேர்த்தியான விமர்சனம் மற்றும் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் ஆகியவற்றை பதிவு செய்வதில் கை தேர்ந்தவராக இயங்கிவந்த கௌஷிக் திடீரென மரணம் அடைந்திருப்பது இணையதள வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக இன்று ஆகஸ்ட் 15 மாலை மதியம் 3 மணி அளவில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள சீதாராமம் திரைப்படத்தின் வசூல் விபரங்கள் குறித்து பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் விமர்சகர் கௌஷிக்.
இந்நிலையில் சற்று முன் வெளியான இவரது இறப்பு செய்தி இவரை பின் தொடரும் ரசிகர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியான செய்தியாக இருக்கின்றது.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நெட்டிசன்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருவராக இருந்து வந்த கௌஷிக் என்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவுக்கு கணத்த இதயத்துடன் தமிழகம் டாட் காம் மற்றும் வாசகர்கள் சார்பாக ஆழ்ந்த வருத்தங்களையும் அவரது குடும்பத்தாருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவருடைய இந்த இறப்பு செய்தி அறிந்த நெட்டிசன்கள் பலரும், “அடுத்த நிமிடம் நிச்சயமில்லாத வாழ்க்கை.. இருக்கும்வரை அன்பை பரப்புவோம்..” என்று தங்களுக்காக சபதம் எடுத்து வருகின்றனர் என்பதை பல்வேறு பதிவுகள் மூலம் பார்க்க முடிகிறது.
சுதந்திர தினமான இன்று மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை கொடுத்து பிரியா விடை பெற்றுள்ளார் நண்பர் கௌஷிக். ஒரு திரைப்படத்தின் உண்மையான ரிசல்ட் என்ன என்பதை தெரிந்துகொள்ள நெட்டிசன்கள் பலரும் தேடும் ஒரு பெயர் கௌஷிக்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், சினிமா என்பது என்னை பொறுத்தவரை வெறும் பொழுதுபோக்கு கிடையாது என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கான ஒரு உந்துசக்தியாக பார்க்கிறேன் என்று கூறியிருந்தார் கௌசிக் என்பது குறிப்பிடத்தக்கது.