பிரபல நடிகை கயல் ஆனந்தி ( Kayal Aanandhi ) யூகி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும் போது நான் கர்ப்பமாக இருந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் அப்போது நான் கர்ப்பமாக இருந்தேன் என அறிவிக்காததற்கு காரணம் என்ன என்று கூறியுள்ளார். அது தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Kayal Aanandhiஅவர் கூறியதாவது, கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற காரணத்தினால் தான் என பதிவு செய்திருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கயல் ஆனந்தி அதனை தொடர்ந்து அதே ஆண்டு வெளியான கயல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
Kayal Aanandhiஇயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் கயல் ஆனந்திக்கு பெயர் சொல்லும் திரைப்படமாக அமைந்தது. அதுவரை ஆனந்தி என்று அறியப்பட்ட இவர் அதன் பிறகு கயல் ஆனந்தி என்று ரசிகர்களால் அறியப்பட்டார்.
அதன் பிறகு த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உள்ள படங்களில் நடித்தார். இவர் நடித்த படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படங்களாக இருக்கின்றன.
Kayal Aanandhiஅதனை தொடர்ந்து இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருடைய திருமணம் காதல் திருமணம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், வீட்டில் பார்த்த நபரைத் தான் நான் திருமணம் செய்து கொண்டேன் இது காதல் திருமணமல்ல இனிமேல் என்னுடைய கணவரை நான் காதலிப்பேன் என்று பதிவு செய்திருந்தார் நடிகை கயல் ஆனந்தி.
Kayal Aanandhiதிருமணத்திற்கு பிறகு கர்ப்பமான கயல் ஆனந்திக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் சமீபத்தியயூகி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அயலாநதி இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம் ஸ்பெஷலான படம் இந்த படத்தில் நடிக்கும் பொழுது நான் கர்ப்பமாக இருந்தேன்.
நான் கர்ப்பமாக இருப்பதை கூறினால் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்தில் நான் தர்மமாக இருப்பதை வெளி காட்டிக் கொள்ளவில்லை என பதிவு செய்திருக்கிறார்.
Kayal Aanandhiஇதனை பார்த்த ரசிகர்கள் பட வாய்ப்புக்காக இப்படியுமா செய்வீர்கள்..? கர்ப்பத்தை மறைத்து பட வாய்ப்பு பெற வேண்டுமா..? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மறுபக்கம் சினிமா மீதான தங்களுடைய ஆர்வத்தை பாராட்டுகிறோம் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்