போடு டா… வெடிய… மலையாளத்துக்கு போகறாங்க கயல் ஆனந்தி….!! மாஸ் செய்தியை கேட்டு மெர்சலான ரசிகர்கள்…!!

 கயல் படம் வெளிவந்து எட்டு வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் இந்த நடிகையைப் பற்றி என்னாதவர்கள் யாரும் இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் மத்தியில் ஒன்றிப்போய் இருக்கக் கூடிய நடிகை தான் கயல் ஆனந்தி.

 தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் யூகி. இந்தப் படத்தை கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி பவித்ரா லட்சுமி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தத் திரைப்படமானது வருகின்ற 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 மேலும் இந்தப் படத்திற்கு ரெஞ்சன் ராஜ் இசையமைக்க, யுவராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தைப் பற்றி கயல் ஆனந்தி பேசும்போது  இத்தனை நாட்கள் என்னை உங்கள் நினைவில் வைத்து உங்களோடு ஒருத்தியாக நினைத்தமைக்கு நன்றி என கூறினார்.

 இதனை அடுத்து யூகி படம் பற்றி சொல்லும் போது இந்த படம் அவரது மனதிற்கு மிகவும் நெருக்கமான படம் என்று கூறினார்.

மேலும் இந்த படத்தில் நடிக்கும் போது அவர் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்த விஷயத்தை கூறினார். இந்தப் படம் மிகவும் சுவாரசியமான கதை அம்சம் கொண்டது என்றும் அதை மிகவும் அட்டகாசமான முறையில் இயக்குனர் திறம்பட எடுத்ததோடு அதில் நடித்துள்ள நடிகர்களும் திறமையாக நடித்திருக்கிறார்கள் என்று கூறியதோடு தான் அந்த படத்தில் நடித்ததை குறித்து பெருமையோடு நினைப்பதாக கூறியிருக்கிறார்.

 அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிக்க வந்த பிறகுதான் இது மலையாளத்திலும் தயாராக போவது எனக்கு தெரியவந்தது.இதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தப் படத்தின் மூலம் நான் மலையாளத்திலும் அறிமுகமாக இருக்கிறேன். வேறு மலையாள பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அதில் நடிப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

 இந்தப் படத்தில் நான் நடித்த நடிப்பை பார்த்துதான் மலையாளத்திலும் எனை நடிக்கச் சொன்னார்கள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மிக நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.  ஒரு சின்ன இடைவேளைக்குப் பிறகு நடிப்பிலும் தான் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

 இதை அடுத்து மலையாள தேசத்தில் மாஸ் காட்ட கயல் ஆனந்தி ரெடி ஆகிவிட்டார் என்பது தெரிந்தால் இது தற்போது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …