இந்த படத்துல ஏன்டா நடிச்சோம்..ன்னு வருத்தப்பட்டேன்..! – கயல் ஆனந்தி பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அறியப்பட்ட பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை கயல் ஆனந்தி. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து தமிழில் பொறியாளன் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்து இருந்தார்.

ஆனால் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் திரைப்படம் தான். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன் பிறகு இவரை கயல் ஆனந்தி என்றே பலரும் அழைக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா எனக்கு இன்னொரு பேர் இருக்கு, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இதில் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்தில் நடிகை கயல் ஆனந்தி நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால் பரியேறும் பெருமாள் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி கதைகளை சேர்த்திருந்தார் கயல் ஆனந்தி.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போதும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை கயல் ஆனந்தி தான் நடித்த படங்கள் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது நான் நடித்த நயன்தாரா திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படம் என்னிடம் சொல்லப்பட்ட கதை ஒன்று ஆனால் எடுக்கப்பட்ட கதை ஒன்று படமாக்கும் பொழுது எனக்கு கதை என்ன என்று கூட சரியாக தெரியவில்லை.

இயக்குனர் கொடுத்த காட்சிகளை அப்படியே நடித்துக் கொடுத்தேன். ஆனால், எனக்கு நிகராக இன்னொரு ஹீரோயின் இந்த படத்தில் இருப்பது கூட எனக்கு தெரியாது. இந்த படம் வெளியான பிறகு ஏன்டா இந்த படத்தில் நடித்தேன் என்று மிகவும் வருந்தினேன் என்று கூறியுள்ளார் நடிகை கயல் ஆனந்தி.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்ரீதேவி சோடா சென்டர் என்ற திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார் கயல் ஆனந்தி. இந்த படத்தை காட்டிலும் த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தில் அளவான கவர்ச்சியை தான் காட்டி இருந்தார்.

இப்படி இருக்கும் போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடித்தது குறித்து வருந்துகிறேன் என்று கயல் ஆனந்தி கூறியிருப்பது ரசிகர்களால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …