“என்ன சொல்றீங்க..? – கீர்த்தி சுரேஷ் திருமணம்..!..” – அவரது தாய் வெளியிட்ட தகவல்..! – ரசிகர்கள் ஷாக்..!

இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் 2015 ஆம் ஆண்டு பிரபுவின் மகனான விக்ரம் பிரபுவோடு இணைந்து தமிழ் சினிமாவில் நடித்து அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர்  கீர்த்தி சுரேஷ்.

 இவருக்கு சினிமா பின்னணியில் இவரது தாய் மற்றும் தகப்பன் இருந்த சூழ்நிலையால் மிக விரைவிலேயே சினிமாவில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களோடு நடிக்க கூடிய வாய்ப்புகளை பெற்றார்.

 முதல் படத்தை அற்புதமான நடிப்புத் திறனை காட்டிய இவருக்கு தமிழில் முன்னணி நாயகராக திகழும் சிவகார்த்திகேயனோடு இணைந்து ரஜினிமுருகன் படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

 இந்தப் படத்தில் செம மாஸாக தனது நடிப்புத் திறனை எதார்த்தமாக வெளிப்படுத்திய இவருக்கு அடுத்ததாக மீண்டும் சிவகார்த்திகேயனோடு இணைந்து ரெமோ படத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.

 இந்த சந்தர்ப்பத்தையும் பக்காவாக பயன்படுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷ் இளைஞர்களின் மனதை கவரும்படி இந்த படத்தில் நடித்து அவர் மேலும் தனது ரசிகர்களின் வட்டாரத்தை விரிவுபடுத்திக் கொண்டார்.

இதையும் படிங்க : பாக்க சகிக்கல.. மாலத்தீவுல மட்டும் தான் மஜாவா..? – ராஷ்மிகா-வை விளாசும் நெட்டிசன்ஸ்..!

 இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு மாறி மாறி வந்த சூழ்நிலையில் ரஜினி, விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களோடு நடித்தார்.

 அதுமட்டுமல்லாமல் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய விருதையும் பெற்று சாதனை படைத்தார். இதனை அடுத்து நயன்தாராவை போலவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்திய நிலையில் இவருக்கும் நடிகர் விஜய்க்கும் சம்திங் சம்திங் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் பற்றிய திருமண செய்தியை இவர் அம்மா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

 மேலும் கீர்த்தி சுரேஷ் தன்னுடன் பள்ளியில் பயின்ற நபரை 13 ஆண்டுகளாக தொடர்ந்து காதலித்து வருவதாகவும் இதனை அடுத்து இரு வீட்டார் சம்மதத்தின் பெயரில் விரைவில் திருமணம் நடக்கும் என்று இணையத்தில் செய்திகள் படு வேகமாக வெளிவந்தது.

இதனை அடுத்து கீர்த்தி சுரேஷின் அம்மா இந்த செய்தி முற்றிலும் பொய்யான தகவல் இதுபோன்ற செய்திகளை தயவுசெய்து கிளப்பாதீர்கள் என்று அதிரடியாக கூறி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

 இதை எடுத்து கீர்த்தி சுரேஷின் அம்மா இவரது திருமணம் பற்றி விரைவில் அறிவிப்பார். தற்போது இவருக்கு அதிக அளவு படங்கள் கைவைசம் இருக்கக்கூடிய வேளையில் அதில் முழுமூச்சாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே தற்போது திருமணம் செய்து கொள்ள எந்த விதமான சூழ்நிலையும் அவருக்கு இல்லை என்பதை தெளிவாக விளக்கி விட்டார்.

இதையும் படிங்க : “Zoom பண்ணாதிங்க மாமா.. நானே பக்குதுல வந்து காட்டுறேன்…” – திணறடிக்கும் பூனம் பாஜ்வா..!

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …