கீர்த்தி சுரேஷ்-ன் 13 வருட காதல்..! – காதலன் யாருன்னு பாருங்க..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இவரைப் பற்றிய காதல் கிசுகிசு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த தகவல்தான் இணையத்தில் அவ்வப்போது பரவுவது வாடிக்கையானது. ஆனால், தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருவரை காதலிக்கிறார் என்றும் அவர் கொடுத்த விபரங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

பிரபல நடிகை மேக்னாவின் மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவருடைய தந்தை ஒரு பிரபல நடிகரும் சினிமா தயாரிப்பாளர் ஆக இருக்கிறார். எனவே கலை குடும்பத்தின் பின்னணி இருப்பதால் எளிதாக சினிமாவில் நுழைந்து வெற்றி கொடி நாட்டியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவருக்கு பட வாய்ப்பு எளிதாக கிடைத்துவிட்டால் கூட தன்னுடைய திறமை மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பின் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்று இருக்கின்றன. ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெற தவறுகின்றன.

எனவே தன்னுடைய மார்க்கெட்டை மெது மெதுவாக இழந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்பதுதான் உண்மை. சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கும் இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து நடிகர்கள் சிவகார்த்திகேயன் விஜய் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார்.

நடிகை கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் இவர் நடித்த மகாநதி என்ற திரைப்படம் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றது. காரணம் மறைந்த நடிகர் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் புறமான இந்த படத்தில் சாவித்திரி ஆகவே வாழ்ந்து அசத்தி இருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று ரசிகர்கள் அவருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தனர்.

மட்டும் இல்லாமல் தெலுங்கானா அரசு சார்பாக சிறந்த நடிகைக்கான விருதும் அந்த படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் கொடுக்கப்பட்டது. பலரும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவே வராது என்று கலாய்த்து கொண்டிருந்த நேரத்தில் சாவித்திரி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கிரியா ஊக்கியாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

கதைகளை தேர்வு செய்வதில் கராராக இருக்கும் இடத்தை கீர்த்தி சுரேஷ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கூட கவனம் செலுத்துகிறார். அந்த வகையில் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதில் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காணாமல் போல தனது கணவரை தேடி சென்ற போது.. கணவரை கடத்தியவர்களால் உடல் ரீதியாக சிதைக்கப்படுகிறார். உயிர் மட்டுமே மிஞ்சியிருந்த நிலையில் தப்பித்து வரும் கீர்த்தி சுரேஷ்.. அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் மீதி கதையாக இருந்தது.

தற்போது அவருக்கு பட வாய்ப்பு குறைந்து இருப்பதால் கவர்ச்சி அவதாரத்தை கையில் எடுத்திருக்கிறார் அம்மணி. எனவே அடுத்தடுத்த ஒரு ஐந்து வருடங்களுக்கு இவருக்கு பட வாய்ப்புகளுக்கு ஏதும் பிரச்சனை இல்லை என்ற சூழல் நிறுவினாலும் கூட விரைவில் இவர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கடந்த 13 ஆண்டுகளாக ரிசார்ட் உரிமையாளர் ஒருவரை இவர் காதலித்து வருகிறதாகவும் கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சுகள் நிலவுகிறது. இவருடைய காதலுக்கு இரண்டு வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருக்கின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அந்த ரிசார்ட் ஓனர் யார் என்ற தகவல் எதுவும் தெரியாததால்.. இது உண்மையான தகவலா..? அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா..? என்ற ஒரு கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து இருக்கிறது.

ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்து தகவல் வெளியான போது அது உண்மையில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர். இந்நிலையில், இந்த தகவல் குறித்து என்ன கூற போகிறார்கள் என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …