“பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால்…” – இதை பண்ணுவேன்..! – கூச்சமே இல்லாமல் கூறிய கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் நான் என்ன செய்வேன் என்று கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசியிருக்கிறார். பொதுவாகவே இப்படியான கேள்விகளை நடிகைகளிடம் கேட்கும்பொழுது நடிகைகள் பலரும் கூச்சப்படுவார்கள்.. பதில் சொல்ல தயங்குவார்கள்.

அப்படியே பதில் கூறினாலும் இதுவரை என்னிடம் அப்படி யாரும் நடந்து கொண்டதில்லை அனைத்து துறையிலும் இப்படித்தான் நடக்கிறது சினிமாவில் மட்டும் நடப்பதுபோல் பேசுகிறீர்கள் என்று ரெடிமேடாக வைத்திருக்க கூடிய சில பதில்களை ஒப்பித்து விட்டு கடந்து விடுவார்கள்.

ஆனால் நடிகை கீர்த்தி சுரேஷ் கூச்சமில்லாமல் வெளிப்படையாகத் என்னுடைய பதிலை பதிவு செய்திருக்கிறார். பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சுரேஷின் மகளான கீர்த்தி சுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் ஓப்பன் செய்து கொடுத்தது.

அதன் பிறகு மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரெமோ என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து முன்னணி நடிகர்களான சூர்யா விஜய் விக்ரம் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

அவர் கூறியதாவது நான் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான ஒரு பெண்.. இதனால் என்னிடம் யாரும் படுக்கைக்கு அழைத்தது கிடையாது. சினிமா துறையில் இருக்கக்கூடிய அனைவருக்கும் நான் யார் என்னுடைய பின்புலம் என்ன.. என்று தெரியும். குறைந்தபட்சம் பாலியல் ரீதியாக அணுகுவதை கூட என்னிடம் யாரும் செய்து கிடையாது.

ஆனால் என்னுடன் பயணிக்கும் சக நடிகர்கள் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த விஷயங்களை என்னிடம் பகிரங்கமாக பகிர்ந்து இருக்கிறார்கள். ஒருவேளை என்னை யாராவது பட வாய்ப்பு கொடுக்கிறேன் என்று படுக்கைக்கு அழைத்தால் நான் அந்த படத்தில் நடிக்கவே மாட்டேன்.

படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும்.. இல்லை என்றால் கிடைக்காது என்ற நிலை வந்தால் நடிப்பை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுவேனே தவிர ஒரு நாளும் படுக்கையை பகிர்ந்து பட வாய்ப்பை பெற முயற்சி செய்ய மாட்டேன் என்று வெளிப்படையாக நெத்தியடி பதில் கொடுத்திருக்கிறார்.

சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …