நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மலையாள மொழிகளில் மும்முரமாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் இவர் உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவர் தனது சிறந்த நடிப்பால் நிறைய ரசிகர்களை தனக்காக சேர்த்து வைத்திருக்கிறார். மேலும் இவர் பல போட்டோ சூட்டுகள் நடத்தி அடிக்கடி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்பவர்.
தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி ஜெயம்ரவி பேசி இருக்கக் கூடிய பேச்சானது அனைவரும் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால் ஒரு முறை ஜெயம் ரவி அவர் மனைவியோடு ஒரு விசேஷத்திற்கு சென்று இருக்கிறார். அந்த விசேஷத்திற்கு சென்றிருந்த வேளையில் கீர்த்தி சுரேஷும் அங்கு இருந்திருக்கிறார்.
திடீரென்று ஜெயம் ரவிக்கு போன் வர போன் பேசுவதற்காக தன் சேரை விட்டு எழுந்து சென்று போயிருக்கிறார். அந்த சமயத்தில் அந்த சேரில் வேறு ஒருவர் அமர்ந்து விட ஜெயம் ரவி வந்து பார்த்தபோது அந்த இடத்தில் இடம் இல்லாத காரணத்தினால் அவர் வேறொரு சேரில் போய் அமர்வதற்கு முற்பட்டிருக்கிறார்.
இதனைப் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தன் சேரை ஜெயம்ரவிக்கு கொடுத்து இதில் அவர் மனைவியோடு இணைந்து அமருங்கள் என பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்வினை தான் தற்போது ஜெயம்ரவி ஒரு மேடையில் பேசும் போது கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல் சினிமாவில் இடம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று அந்த இடத்தையே கீர்த்தி சுரேஷ் தனது விட்டுக் கொடுத்துவிட்டார் என்று நக்கலாக பேசி இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அடடா ஜெயம் ரவியின் மனைவியை ஜெயம் ரவியோடு சேர்த்து வைத்த பெருமை நம் கீர்த்திசுரேஷ் சாரும் என்று கலாய்த்து வருகிறார்கள்.
கீர்த்தி சுரேஷின் இந்த தாராள மனசை பார்த்து விழி பிதுங்கி கிடக்கிறார்கள் ரசிகர்கள். இதன் மூலம் விட்டுக் கொடுத்தால்.. கெட்டுப் போக மாட்டார்கள் என்ற பண்பினை மிக அழகான முறையில் நம் கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்தியிருக்கிறார்.