பிரபல மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் மலையாள நடிகையான மேனகா தம்பதியின் மகளாக கீர்த்தி சுரேஷ் பிறந்தார். ஆரம்ப காலத்தில் இவரும் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு வெளிவந்த கீதாஞ்சலி என்ற மலையாள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதை எடுத்து பல பட வாய்ப்புகள் இவருக்கு வந்து குவிந்தது.
அந்த வரிசையில் தமிழில் இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தை அள்ளிச் சென்றார்.
இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தி மொழியிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்த ரஜினி முருகன் இவரது திரையுலக வாழ்க்கையை திருப்பி போட்டது என்று சொல்லலாம்.
அந்த அளவு ரசிகர்களின் மத்தியில் பேசக்கூடிய திரைப்படமாகவும் அவர்கள் மனம் கவர்ந்த நாயகியாகவும் வெற்றி கண்டார்.இதனை அடுத்து நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நடிகையர் திலகம் என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றார்.
இந்த படத்தில் இவர் தத்துரூபமாக சாவித்திரியை போலவே நடித்து இருப்பார். இதன் காரணத்தால் இவருக்கு இந்த படத்தின் மூலம் தேசிய விருது கிடைத்தது. இதனை அடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் அவ்வப்போது கவர்ச்சி மிகு புகைப்படங்களை போட்டு வருவார். அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் இது படுக்கை அறையில் இருப்பது போல இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் தான். அட நம்ம கீர்த்தி சுரேஷா படுக்கையறை காட்சிகளை படமாக்கி இருக்கிறார் என்று எண்ணும்போதே அதற்கான விளக்கமும் கிடைத்துவிட்டது.
அது என்ன எனில் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனை அறிந்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். ஏற்கனவே, தெலுங்கில் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்க் தே திரைப்படத்தில் படு சூடான படுக்கையறை காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அந்த பாலிவுட் படத்தின் பெயர் என்ன? எப்போது வெளிவரும் என்பதை ரசிகர்கள் படு வேகமாக தேட ஆரம்பித்து விட்டார்கள்.