பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் தொடர்ந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரஜினி முருகன் ரெமோ உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் நடித்த இரண்டு திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றன.
இதையும் படிங்க : அது மட்டும் தனியா தெரியுது..? – முன்னழகை எடுப்பாக காட்டி.. சூடேற்றும் சரண்யா துராடி சுந்தர்ராஜ்..!
எனவே இவருக்கான மார்க்கெட் ஓபன் ஆனது. இவருக்கான தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. என்ன இருந்தாலும் இவருக்கு நடிப்பு வரவில்லை. ஓவர் ஆக்டிங் செய்கிறார். சினிமா பின்புலம் இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று இவரை சுற்றி விமர்சனங்களும் இருந்தது.
ஆனால், மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான மகாநடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன் மீது இருந்த அப்படியான விமர்சனங்களை சுக்கு சுக்காக அடித்து நொறுக்கினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Keerthy Sureshஇன்னும் சொல்லப்போனால் சாவித்திரி ஆகவே வாழ்ந்திருந்தார் அந்த திரைப்படத்தில் என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் நடித்த பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.
கடந்த வாரம் அவரது நண்பரான பர்ஹான் பின் லியாகத் என்பவருக்கு அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, இன்ஸ்டாகிராம் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
Keerthy Sureshஅதன்பிறகு அவர்தான் கீர்த்தி சுரேஷின் காதலன் என இணையதளங்களிலும், யு டியுப் தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன. அது குறித்து எதுவும் சொல்லாமல் இருந்த கீர்த்தி சுரேஷ் ஒரு ஆங்கில இணையதளத்தின் செய்தியைப் பகிர்ந்து அதற்கு பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க : “வெயிட் தாங்காமல் தொங்கும் ப்ரா..” – செல்ஃபி எடுத்து காட்டும் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..!
“ஹஹஹஹா இந்த நேரத்தில் எனது அன்பான நண்பரை இழுக்க வேண்டியதில்லை. உண்மையான மர்ம மனிதரை நான் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்துவேன்… அதுவரை “சில் பில்” ஆக இருங்கள். குறிப்பு – ஒரு முறை கூட சரியாக வரவில்லையா,” என கிண்டலடித்து பதிலளித்துள்ளார்.
Keerthy Sureshஆங்கில இணையதளம் ‘மர்ம மனிதர்’ என்ற அர்த்தத்தில் ‘மிஸ்டரி மேன்’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருந்தது. அதற்குத்தான் கீர்த்தி சுரேஷ் மேலே சொன்னபடி தன்னுடைய பதிலைப் பதிவு செய்துள்ளார்.