தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தனுஷ் சூர்யா விக்ரம் விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. தன்னுடைய முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் ஆஸ்தான நாயகியாக உருவெடுத்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் இவர் நடித்தது இவரை இந்தியா முழுவதும் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது.
மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கீர்த்தி சுரேஷ் பெற்றார். இது ஒருபக்கம் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்து வந்தாலும் மறுபக்கம் ஹீரோவை சுற்றி டூயட் பாடம் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் சாணி காயிதம் என்ற திரைப்படத்தில்ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அம்மணி. அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்தார் கீர்த்தி சுரேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த உடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை விதவிதமான கோணங்களில் காட்டி ரசிகர்களை நீ சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் எந்தப் பக்கம் பார்த்தாலும் ஒரு மார்க்கமாகவே இருக்கீங்களே.. என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்