நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் ரெமோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அந்தஸ்தைப் பெற்றவர்.
சூட்டோடு சூடாக தெலுங்கு சினிமாவிலும் கால் பதித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
முக்கியமாக பழம்பெரும் நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்றில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் இடம் பெற்ற ஒரு நடிகையாக மாறினார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சினிமாவில் அறிமுகமான புதிதில் கவர்ச்சிக்கு கொள்கைகள் கோட்பாடுகள் என கூறி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் காலமாக கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. மட்டுமில்லாமல் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்று தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு ரகசியமாக தூது விட்டு இருக்கிறார் என்ற விவரம் தெரிய வருகிறது.
முன்னதாக நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ் இதுநாள்வரை காட்டாத கவர்ச்சி காட்டி ரசிகர்களை சூட்டை கிளப்பினார்.
தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தற்போது தன்னுடைய வளர்ப்பு நாய் மற்றும் மினி கூப்பர் காரை எடுத்துக் கொண்டு கடற்கரைக்கு விசிட் அடித்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
டார் டாராக கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்… உள்பக்கமாக மடித்து கட்டிய தொளதொள டீசர்ட்.. சகிதமாக அழகு தேவதையாக நிற்கும் இவருடைய புகைப்படங்கள் கலக்கி வருகின்றது.