“என்னா கீர்த்தி… அவசரப்பட்டியே..” – நெட்டிசன்களால் வச்சி செய்யப்படும் கீர்த்தி சுரேஷ் ..!

நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த தகவலால் அவரை நெட்டிசன்கள் பங்கம் செய்து வருகின்றனர். நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் சேர்ந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த டீசர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாகுபலி. ஆர் ஆர் ஆர், கே ஜி எஃப் உள்ளிட்ட பிற மொழி படங்கள் தமிழ் சினிமாவின் பல்லை பிடித்து பதம் பார்த்துவிட்டது என்ற மனநிலையில் இருந்த தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் படத்தை உற்று நோக்கி வருகின்றனர்.

இந்த படத்தின் டீசரும் ரசிகர்களை திருப்தி படுத்தும் விதமாகவே இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனும் அவலுடன் இருக்கின்றான்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். ஆனால், முதன்முதலில் இந்த பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் இதை விட்டால் எனக்கு வேறு வாய்ப்பு கிடைக்காது என்று அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் வாய்ப்பை தவற விட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

ஆனால், அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாக நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை நழுவ விட்டு விட்டார் என்று ஒருபக்கம் புலம்பும் அவரது ரசிகர்கள் இருக்க..

மறுபக்கம் கீர்த்தி சுரேஷ் எதை செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இருக்கும் சிலர் அவசரபட்டியே கீர்த்தி.. மகாநடி படத்தை விட இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம்.. என்று கீர்த்தி சுரேஷை பங்கக்ம் செய்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …